வடக்கில் மேலுமொரு முக்கிய பதவிக்கு சிங்கள மொழி பேசுபவர் நியமனம்!

Date:

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய முகாமையாளர் (பொறியியல் பிரிவு) பதவிக்கு வடமாகாணத்தில் இருவருக்கு தகுதியுள்ள நிலையில் அநுராதபுரத்தைச் சேர்ந்த சிங்கள மொழி பேசுபவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய முகாமையாளர் (பொறியியல்) பதவி வெற்றிடமாக இருந்தது.

எனினும் அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கான தகுதி கிளிநொச்சி மற்றும் கோண்டாவில் சாலையில் கடமை புரியும் பொறியியலாளர்களிற்கு உள்ளநிலையில் திருகோணமலையில் கடமையாற்றிய சிங்கள மொழி பேசுபவர் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் தனது கடமைகளை கடந்தவாரம் பொறுப்பேற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நியமனம் பொதுஜன பெரமுன தொழிற்சங்கத்தின் தலையீட்டுடன் நிகழ்ந்ததாக, வடமாகாண இ.போ.ச தொழிற்சங்கங்கள் பல குற்றம்சாட்டியுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

வாசுதேவ நாணயக்கார இலங்கையின் இடதுசாரி அரசியல் வரலாற்றில் முக்கியமானவர் – பிரதமர் ஹரிணி

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, இலங்கையின்...

கல்முனை பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற மீலாதுன் நபி கந்தூரி

மீலாதுன் நபி பெருவிழாவை சிறப்பிக்கும் வகையில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய...

ஆலிம்களும் புத்திஜீவிகளும் சமூக வழிகாட்டலில் இணைந்து செயற்பட வேண்டும் — பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில்

ஆலிம்களும் சமூகத்தின் அறிவுசார் வளமாக விளங்கும் புத்திஜீவிகளும் இணைந்து செயற்பட்டு, சமகால...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்