போதை பொருள் குற்றச்சாட்டு உறுதி: நாடகத்தை அரங்கேற்றிய சஞ்சனா!

Date:

கன்னட சினிமாவையே அதிர வைத்த போதை பொருள் கடத்தல் மற்றும் பயன்படுத்துதல் வழக்கில் கன்னட நடிகைகள் சஞ்சனா கல்ராணியும், ராகினி திவேதியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 3 மாத சிறை வாசத்துக்கு பிறகு இருவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். வழக்கு தொடர்ந்து நடக்கிறது.

ஜாமீனில் வெளிவந்த இருவரும் மீண்டும் சினிமாவில் நடிப்பதில் பிசியாகி விட்டனர். இந்த நிலையில் இருவரும் தடை செய்யப்பட்ட போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களா என்பதை கண்டறிய தடய அறிவியல் துறையினர் அவர்களது இரத்தம், தலைமுடி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து வந்தனர். நேற்று முன்தினம் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில் இருவரும் போதை பொருள் பயன்படுத்துவது உறுதியானதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் இந்த வழக்கில் இருவரும் மீண்டும் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் நடிகை சஞ்சனா கல்ராணி திடீரென பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கவே இந்த ஆஸ்பத்திரி நாடகத்தை அவர் அரங்கேற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

யாழில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட யுவதியின் சடலம்!

யாழ்ப்பாணம், இளவாலையில் அமைந்துள்ள கன்னியர் மடத்தில் பணியாற்றும் 19 வயதான யுவதியொருவர்,...

காலி சிறைக்குள் துப்பாக்கிச்சூடு

காலி சிறைச்சாலையினுள் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இன்று (3) பிற்பகல்...

மஹிந்தவிற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடமிருந்து அழைப்பாணை கிடைக்கவில்லையாம்

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் பரிவர்த்தனை தொடர்பாக, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்