26.4 C
Jaffna
March 29, 2024
மருத்துவம்

குழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்ய வேண்டியதன் அவசியம்!

கண் பார்வை ஆரோக்கியம் என்பது அனைத்து வயதினருக்கும் பொருந்தக்கூடியது. கண் பாதிப்பு என்பது வளர்ந்த பிறகு பெரியவர்களுக்கு அல்லது வயதானவர்களுக்கு மட்டுமே வரக்கூடிய பாதிப்பு கிடையாது. அதிலும் தற்போது குழந்தைகள் மணிக்கணக்கில் கணினியில் அல்லது செல்ஃபோனில் உட்கார்ந்திருக்கிறார்கள். இது அவர்களது கண்ணுக்கு ஆரோக்கியம் அளிக்காது. குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் கண் பரிசோதனை செய்வது அவசியம். இது குறித்து பெற்றோர்கள் அனைவரும் புரிந்து கொள்வது அவசியம்.

​கண் பரிசோதனை ஏன் முக்கியம்

குழந்தைகள் பெரும்பாலும் கம்ப்யூட்டர் அல்லது செல்ஃபோனில் நீண்ட நேரம் செலவிடுகிறார்கள். கூடுதலாக இப்போது குழந்தைகள் ஆன்லைனில் படிக்க செய்கிறார்கள். இதனால் பல குழந்தைகளுக்கு கண்களில் நீர் வடிதல் , கண்களில் எரிச்சல் உண்டாகிறது. ஆனால் இந்த பிரச்சினைகள் தானாகவே சரியாக கூடும் என்று பெற்றோர்கள் நினைக்க கூடாது. சரியான நேரத்தில் கண் மருத்துவரை அணுகி உரிய பரிசோதனை செய்வதன் மூலம் கண்பார்வை பிரச்சினை உண்டாவதை தடுக்க முடியும்.

​குழந்தையை எப்போது மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும்

குழந்தைகளின் கண்களை பராமரிப்பது மிகவும் முக்கியம். குழந்தை வளர்ப்பில் சரியான இடைவெளியில் நீங்கள் தடுப்பூசி போடுவது குறித்து அட்டவணையை தயார் செய்து வைத்திருப்பீர்கள். அதற்கேற்ப மற்ற உடல் பரிசோதனை குறித்தும் முன்கூட்டியே விழிப்புணர்வு கொண்டிருக்க வேண்டும். குழந்தைகள் அதிகமாக இனிப்பு விரும்பி சாப்பிடும் போது அவர்களது பல் சொத்தையாகாமல் இருக்க கவனிப்பது உண்டு. குறிப்பிட்ட இடைவெளிக்கு பிறகு பல் பரிசோதனைக்கு பல் மருத்துவரை அணுகுவது போன்று கண் மருத்துவரை அணுகுவதும் திட்டமிட வேண்டும். வழக்கமான பரிசோதனைகள் சரியான நேரத்தில் கண் பிரச்சனைகள் மற்றும் நோய்கள் தீவிரமாகாமல் தடுக்க முடியும்.

​குழந்தைக்கு கண் பரிசோதனை எந்த வயதில் இருந்து செய்ய வேண்டும்?

குழந்தைகளுக்கு 6 மாதங்கள் ஆகும் போது கண் பரிசோதனை செய்ய வேண்டும். குழந்தையை வழக்கமாக மருத்துவரிடம் அழைத்து செல்லும் போது கண் மருத்துவரிடமும் அழைத்து செல்ல வேண்டும். குழந்தை வளர்ந்து பள்ளிக்கு செல்லும் முன்பு கண் பரிசோதனை தொடங்க வேண்டும். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் குழந்தைக்கு 3 வயதில் தொடங்கி 5 அல்லது 6 வயதில் கண்களை பரிசோதனை செய்ய வேண்டும்.

குழந்தை பள்ளிக்கு சென்ற பிறகு ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு பிறகு கண் பரிசோதனை செய்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். குறிப்பாக முன்கூட்டி பிறந்த குழந்தைகள், கண்பார்வை பிரச்சனனைகள் கொண்ட குடும்ப வரலாறு உள்ள குழந்தைகள் மருத்துவ பரிசோதனை அவசியம் செய்து கொள்ள வேண்டும். அதோடு கண் மருத்துவரை அணுகியும் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

​பிறந்த குழந்தைக்கு கண் பரிசோதனை

பிறக்கும் போது குழந்தையின் கண்கள் முழுமையாக முதிர்ச்சியடைந்திருக்காது. குழந்தை பிறந்த 6 மாத வயதுக்குள் அவர்களது கண்கள் முதிர்ச்சியடைகின்றன. இந்த நேரத்தில் குழந்தையின் கண்கள் பெரியவர்களை போல கவனம் செலுத்த முடிகிறது. அவர்களால் நிறத்தை அடையாளம் காண முடிகிறது. குழந்தையின் கண்களின் நிலையை சரிபார்க்க மருத்துவர் சில சோதனைகள் குறித்து கேட்கலாம். அதிக வெளிச்சம் திடீரென பாயும் போது குழந்தை கண்களை திறந்து மூடுகிறார்களா, கண்கள் ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்த முடிகிறதா என்ற பரிசோதனையும் செய்யப்படும்.

​மழலை குழந்தைகள் சோதனை

குழந்தைக்கு சில வார்த்தைகளை படிக்க முடியாத போது அவர்கள் அதிகம் சங்கடப்படுவார்கள். அப்போது அவர்களது கண்களை வேறு வழிகளில் சோதிக்க செய்வார்கள். எழுத்துக்கள், சிறிய படங்கள், சின்னங்கள் போன்ற பிற படங்களை காட்டுகிறது. ரெட்டினாஸ்கோபி விழித்திரையின் பிரதிபலிப்பை ஆய்வு செய்ய கண்ணின் ஒளிக்கு பதிலுறும் ஒரு திறன். இதில் 3 டி கண்ணாடிகளை பயன்படுத்தி கண்கள் எப்படி செயல்படுகின்றன. இதற்கு டாட் ஸ்டீரியோப்ஸிஸ் சோதனை செய்யப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஐந்தில் ஒரு பெண்கள் வாழ்நாளில் ஒரு முறையும் உடலுறவில் உச்சக்கட்டத்தை அனுபவிப்பதில்லை!

Pagetamil

புரையேறும் போது தலையில் தட்டலாமா?

Pagetamil

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

மூட்டுவலி உள்ளவர்கள் தரையில் உட்காரக்கூடாது என்பது உண்மையா?

Pagetamil

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

Leave a Comment