தற்போதைய ஆய்வுகளின் மூலம் கடந்த காலத்திற்கும், நிகழ் காலத்திற்கும் இடையிலான மக்களின் அறிவு வளர்ச்சி, வேறுபாடுகள், ஏற்றத் தாழ்வுகள் போன்றவை நமக்கு தெரிய வருகிறது. நம் முன்னோர்களுக்கும், நமக்கும் உள்ள தலைமுறை இடைவெளி என்பது ஒவ்வொரு தலைமுறைக்கும் வேறுபட்டுக் கொண்டே வருகிறது. இருப்பினும், சில கலாச்சார நடைமுறைகள் இன்றைய காலகட்டம் வரை மாறாமல் அப்படியே உள்ளன. அதில், ஒன்று தான் இனப்பெருக்கம், மனிதனின் இனப்பெருக்கம் தற்போதைய காலகட்டம் அப்படியே தான் உள்ளது. தற்போதைய காலத்தின் வாழ்க்கை முறை மாறினாலும் திருமணம், கர்ப்பம் போன்ற விஷயங்களில் இன்னும் சிலர் தங்களின் கலாச்சாரத்தை பின்பற்றியே வருகின்றனர்.
முன்னோர்களின் காலத்தில் செக்ஸ், உடலுறுவு என்ற வார்த்தையைக் கூட மக்கள் பயன்படுத்த கூச்சப்படுவர். ஆனால், தற்போதைய சமூகத்தில் பாலியல் உடலுறவு குறித்து பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. இதனால் முன்னோர்களுக்கு இது பற்றிய அறிவு இல்லை, அதனால் தான் அவர்கள் நிறைய பிள்ளைகளை பெற்று கஷ்டப்பட்டனர் என்ற கருத்தில் உண்மை இல்லை. ஆம், முன்னோர்களுக்கும் செக்ஸ், உடலுறுவு, கருத்தடை, பிறப்புக் கட்டுப்பாடு போன்றவை குறித்து தெரிந்து தான் இருந்தது. ஆனால், அறிவியல் இல்லாத காலகட்டம் ஆதலால், அவர்களின் வழிகள் இயற்கையைச் சார்ந்தே இருந்தது. இடைக்காலத்தில் பெண்கள் தேவையற்ற கர்ப்பத்தைத் தவிர்க்க பல்வேறு மூலிகைகளை பயன்படுத்தி வந்தனர். அவை என்னவென்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.
மாதவிடாயை கணக்கில் கொள்வது
மாதவிடாய் நாட்களை கணக்கில் கொள்வதும் ஒன்று. மாதவிடாய் சரியாக இல்லாதது கர்ப்பத்தின் முக்கிய அறிகுறிகளில் ஒன்று என்பதால், இது பிறப்பு கட்டுப்பாட்டு முறைகளில் இடம் பெறுவதில் ஆச்சரியமில்லை தான். இப்போதும் கூட, பெண்கள் தங்களின் மாதவிடாய் நாட்களை கணக்கில் கொண்டு கர்ப்பம் தரித்துள்ளோமா அல்லது இல்லையா என்பதை கண்டறிந்து வருகின்றனர்.
மாதவிடாயை கர்ப்பத்தின் சிறந்த குறிப்புகளாக பயன்படுத்தி வந்தனர். கர்ப்பம் தரித்து கருக்கலைப்பு செய்வதற்கு பதில், மாதவிடாயைத் தூண்டும் செயல்களைச் செய்து கர்ப்பம் ஏற்படாமல் ஏற்படாமல் தவிர்த்து வந்தனர். அதுவும், தங்களின் வீடுகளில் உள்ள சமையலைறையில் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டே கருத்தரிப்பு முறைகளை மேற்கொண்டு வந்தனர். அதேசமயம் அப்படி பயன்படுத்தும் சில பொருட்கள் சிறிய விளைவைக் கொண்டிருக்கும்.
உடலுறவுத் தடைகள்
இன்று பயன்படுத்தப்படும் ஆணுறைகளைப் போலவே, இடைக்காலத்தில் பிறப்பு கட்டுப்பாட்டு முறையாக உடல் தடைகள் நம்பப்பட்டன. அதாவது, கருத்தரிப்புக்கு தடையாக உள்ள மூலிகைகளை கருப்பையின் வாயில் சொருகி விட்டு பின்பு உறவில் ஈடுபடுவது போன்ற செயல்களை நம்பினர். இப்படி உடலின் நுட்பமான பகுதியில் மூலிகைகளை திணிப்பது என்பது இன்றைய காலக்கட்டத்தில் யாராலும் யோசித்துக் கூட பார்க்க முடியாது. இதனை வைத்துப் பார்க்கும் போது, இடைக்கால மக்களுக்கு கருத்தரித்தல் தொடர்பாக பெண் உடற்கூறியல் பற்றி மக்களுக்கு நல்ல புரிதல் இருந்தது என்பதைக் காட்டுகிறது.
விந்துக்கொல்லி
நொனோக்ஸினோல் -9 என்ற விந்து கொல்லி வேதிப்பொருள் இன்றைய நவீன கால மருத்துவ முறையில் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், இது போன்ற விந்து கொல்லி முறையை பழங்காலத்தில் இருந்தே பயன்படுத்தி வந்துள்ளனர். அதாவது, கர்ப்பத் தடைக்கு பரிந்துரைக்கப்பட்ட தாவரங்களின் இலை மற்ற பிற மூலிகைகளை பயன்படுத்தி வந்துள்ளனர். இதனால் கருத்தரிப்பு தடைப்படும்.
அதேபோல், இடைக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பிற கருத்தடையில் பிறப்புறுப்பில் தேன் அல்லது வினிகரில் நனைத்த துணியை சொருகுவதும் இதில் அடங்கும். அதேபோல் பலவகையான இனிப்புகள் மற்றும் புளிக்க வைத்த பழங்களை சாப்பிடுவதன் மூலமும் மாதவிடாயைத் தூண்டி கருத்தரிப்பை தடுத்து வரும் முறைகளும் எகிப்திய காலத்திற்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு அரைத்த அகாசியா இலைகளையும் தேனையும் கலந்து நெய்யில் ஊற வைத்து பிறப்புறுப்பில் ஊற்றிக் கொள்ளும் முறைகளும் இருந்துள்ளன. அகாசியாவில் உள்ள லாக்டிக் அமிலம் விந்தணுக் கொல்லியாக இருந்தது.
இடைக்காலத்தில் பாலியல் கல்வி
பாலியல் கல்வி மற்றும் உடற்கூறியல் அறிவு இடைக்கால மக்களுடன், இந்தக் கால மக்களை ஒப்பிடும் போது குறைவாக இருந்தாலும், கர்ப்பத்தை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது பற்றி அவர்களுக்கு நல்ல புரிதல் இருந்தது.



