31.3 C
Jaffna
March 28, 2024
மலையகம்

பலாங்கொடை நகரசபை தலைவரை இடைநிறுத்திய மத்திய மாகாண ஆளுனரின் முடிவை இரத்து செய்தது நீதிமன்றம்!

பலாங்கொடை நகர சபையின் தலைவர் பதவியில் இருந்து சமிக ஜெயமினி விமலசேனவை தற்காலிகமாக இடைநிறுத்தி சப்ரகமுவ மாகாண ஆளுநர் எடுத்த முடிவை இரத்து செய்ய இரத்னபுரி மாகாண உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பலாங்கொடை நகர சபை தொடர்பாக ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

மனுதாரரால் நகர சபை அரசாணை பிரிவு 184 (1) இல் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற நீதித்துறை அதிகாரியின் நியமனத்தை இரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

உயர் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன தனது தீர்ப்பில், ஓய்வுபெற்ற நீதித்துறை அதிகாரியை நியமிப்பதற்கான முடிவு, பகுத்தறிவின்றி மற்றும் நியாயமற்ற முறையில் எடுக்கப்பட்ட முடிவு என விமர்சித்தார்.

அதன்படி, விசாரணை முடிவடையும் வரை மனுதாரரை இடைநீக்கம் செய்ய ஆளுநர் எடுத்த முடிவை இரத்து செய்து உத்தரவிட்டார்..

இரண்டாவது பிரதிவாதி எம்.டி.எம்.ரூமி (பிரதித் தலைவர்) பலாங்கொட நகர சபையின் தலைவரின் செயல்பாடுகள் மற்றும் அதிகாரங்களைப் பயன்படுத்துவது உயர் நீதிமன்றத்தால் எழுத்தாணை மூலம் இரத்து செய்யப்பட்டது.

மனுதாரர் சமிக ஜெயமினி விமலசேன தாக்கல் செய்த மனுவில், அவர் ஜனவரி 12, 2021 அன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் எழுந்த ஒரு சர்ச்சைக்கு தீர்வு காண ஆளுநருக்கு ஒரு கடிதம் எழுதியதாகவும், ஜனவரி 15, 2021 அன்று ஆளுநர் விசேட வர்த்தமானியின் மூலம், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை நியமித்து, விசாரணை அறிக்கை கோரியதாக குறிப்பிட்டிருந்தார்.

விசாரணை நிலுவையில் இருக்கும் வரை மனுதாரரை தலைவர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்ய ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார் மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்தில் தலைவரின் செயல்பாடுகளை நடத்த இரண்டாவது பிரதிவாதியை (நகரசபை பிரதி தலைவர்) நியமித்தார்.

அவர் இடைநீக்கம் செய்யப்படுவதற்கு முன்பு அவரிடம் எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அது ஒரு அடிப்படை காரணம் இல்லாமல் செய்யப்பட்டது, ஒன்பது குற்றச்சாட்டுகளைக் கொண்ட ஒரு குற்றப்பத்திரிகையைப் பெற்றதாக மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.

மனுதாரர் சமிக ஜெயமினி விமலசேன 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து (யூஎன்பி) இருந்து பலாங்கொட நகர சபைக்கு போட்டியிட்டு, தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உயிரிழந்தவரின் நுரையீரலில் பல்

Pagetamil

சாரதி இலேசாக தூங்கி விட்டாராம்!

Pagetamil

சட்டவிரோத மின்கம்பி வேலியில் சிக்கி ஒருவர் பலி

Pagetamil

விபரீதத்தில் முடிந்த காதல்: 44 வயது ஆசிரியைக்கு கத்தியால் குத்திய 45 வயது ஆசிரியை!

Pagetamil

விபத்தில் இளைஞன் பலி

Pagetamil

Leave a Comment