ஒரு நடிகைக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களுக்கு!

Date:

தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கடந்த 16ம் திகதி இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டார் ஷெரின். தடுப்பூசி போட்டுக் கொண்டும் தனக்கு எப்படி பாதிப்பு ஏற்பட்டது என்று தெரியவில்லை என்றார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். இந்நிலையில் தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார் ஷெரின்.

இன்ஸ்டாகிராமில் ஷெரின் கூறியிருப்பதாவது, அடுத்தடுத்து இரண்டு முறை நெகட்டிவ் என்று வந்திருக்கிறது. முதல் முறை பாசிட்டிவ் என்று வந்தது தவறானது என டாக்டர்கள் கருதுகிறார்கள். இது எனக்கு மிகவும் குழப்பமான வாரம். 16ம் திகதி செய்த பரிசோதனையில் பாசிட்டிவ் என்று வந்தது. 17ம் திகதி செய்த சோதனையில் நெகட்டிவ் என வந்தது. மேலும் அதன் பிறகு நடந்த சோதனையிலும் நெகட்டிவ். இருப்பினும் இன்னும் சில நாட்களுக்கு நான் என்னை தனிமைப்படுத்திக் கொள்வேன். உங்களின் ஆதரவுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

ஷெரினின் போஸ்ட்டை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது, ஒரு பிரபலமான நடிகைக்கே பரிசோதனையில் குளறுபடி நடந்திருக்கிறது. அப்படி என்றால் சாதாரண மக்களின் நிலைமை பற்றி சொல்லவா வேண்டும். பில் போட இப்படி செய்திருப்பார்கள் போன்று. எவ்வளவு பணம் பறித்தார்கள் ஷெரின். நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறோம். கொரோனா இல்லாமலேயே இருக்கிறது என்று சொன்னால் ஒருவரின் மனநிலை எந்த அளவுக்கு பாதிக்கப்படும். பாவம் ஷெரின் என்று தெரிவித்துள்ளனர்.

தனக்கு கொரோனா பாதிப்பு என்று ஷெரின் அறிவித்த கையோடு நதியாவும் அறிவிப்பு வெளியிட்டார். தடுப்பூசியின் இரண்டு டோஸ் போட்டும் நதியாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு மட்டும் அல்ல அப்பா, அம்மா, 2 பணியாட்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஷெரினின் போஸ்ட்டை பார்த்தவர்கள் ஒரு வேளை நதியாவுக்கும் பரிசோதனையில் குளறுபடி நடந்திருக்குமோ என்கிறார்கள்.

 

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்தவர் 9 மாதங்களின் பின்னர் கைது

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்தவர்...

மக்கள் வங்கிக்கொள்ளை: உதவி மேலாளர், பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது!

சமீபத்தில் ஹொரனவில் உள்ள ஒரு அரசு வங்கியில் இருந்து ரூ. 35...

அதிக மக்களை இணைக்கும் ஒரு புதிய அரசியல் இயக்கம்: அண்ணாமலை அறிவிப்பு

“அதிக மக்களை இணைக்கும் ஒரு புதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்