சாம்சங் நிறுவனத்தின் மற்றும் ஓர் மிட்-ரேன்ஜ் ஆண்ராய்டு டப்லெட் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. புதிய மாடல் வைபை வசதி கொண்ட கேலக்ஸி டப் எஸ்7 எப்.இ. ஆகும். சாம்சங் கேலக்ஸி டப் எஸ்7 எப்.இ. 4ஜி மாடல் ஏற்கனவே விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் வைபை மாடல் விலை மேலும் குறைவாக இருக்கும் என்றே தெரிகிறது.
புதிய சாம்சங் கேலக்ஸி டப் எஸ்7 எப்.இ. வைபை மாடல் அமேசான் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி டப் எஸ்7 எப்.இ. மாடலில் 12.4 இன்ச் 2560×1600 பிக்சல் டி.எப்.டி. டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. 4ஜி மாடலில் உள்ளதை போன்றே வைபை மாடலிலும் 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்பி கேமரா, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5, மற்றும் 10,090 எம்.ஏ.ஹெச். பட்ரி, அதிகபட்சம் 45 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.