27.6 C
Jaffna
March 29, 2024
இலங்கை

மங்கள சமரவீரவிற்கு தலைவர்கள் அஞ்சலி!

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கோவிட் -19 க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 65 வது வயதில் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்.

மங்கள சமரவீரவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மங்கள சமரவீர கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு கடந்த 13ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவர் உயிரிழந்து விட்டதாக ஏற்கனவே ஒரு வதந்தி பரவியது. எனினும், அது வதந்தியென்பது பின்னர் தெரிய வந்தது.

அனுபவமிக்க அரசியல்வாதியான மங்கள சமரவீர முதன்முதலில் 1989 இல் பாராளுமன்றத்தில் நுழைந்தார். கடந்த பாராளுமன்றம் கலைக்கப்படும் வரை எம்.பி.யாக இருந்தார்.

அவர் பல்வேறு காலகட்டத்தில் நிதி, வெளியுறவு, வெகுஜன ஊடகங்கள் மற்றும் துறைமுகம் உட்பட அமைச்சு பதவிகளை வகித்துள்ளார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் மாத்தறை மாவட்டத்திலிருந்து வேட்புமனு தாக்கல் செய்த போதிலும் அவர்  தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றார்.அத்துடன்,  தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மகிந்த ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் அரசு மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் இரங்கலில்-

மங்கள சமரவீரவின் அகால மறைவு தேசத்திற்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் பெரும் இழப்பாகும். நேற்று மதியம் நான் அவருக்கு போன் செய்தபோது, ​​அவர் விரைவில் குணமடைந்த பின்னர் சந்திக்க காத்திருக்கிறேன் என்று சொன்னேன். ஆனால் அது நடக்கவில்லை – நாட்டில் கட்டுக்கடங்காத தொற்றுநோய் இன்று காலைக்குள் அவரது உயிரைக் கொன்றது.

மங்கள ஒரு சிறந்த அரசியல்வாதியாக இருந்தார், அவர் எப்போதும் சுதந்திரமாகவும் சமமாகவும், மனித உரிமைகள் நிலைநாட்டப்பட்ட ஒரு இலங்கையையும் உள்ளடக்கிய தனது நம்பிக்கைகளுக்கு உறுதியாக இருந்தார். வரையறுக்கப்பட்ட சட்டகங்களிற்கு வெளியே யோசிக்கக்கூடிய ஒரு புதுமையான மனம் அவரிடம் இருந்தது. மங்கள ஒரு சிறந்த தொடர்பாளராகவும் இருந்தார், அவர் எங்கள் அனைத்து மக்களிடையேயும் நல்லிணக்கத்தை ஆதரித்தார். 2015 முதல் 2019 வரையிலான அமைச்சரவையில், அவர் வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் நிதித் துறைகளை மகத்தான திறமையுடன் கையாண்ட முக்கிய நபராக இருந்தார்.

“Fear no more the frown o’ the great;
Thou art past the tyrant’s stroke;
Care no more to clothe and eat;
To thee the reed is as the oak;
The sceptre, learning, physic, must
All follow this, and come to dust.” – Shakespeare(ஷேக்ஸ்பியர்)

ரணில் விக்கிரமசிங்க
தலைவர்
ஐக்கிய தேசிய கட்சி

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

Leave a Comment