ஆப்கானிலிருந்து வந்த விமானம் கடத்தப்பட்டதா?: உக்ரைன் அரசு குழப்பம்!

Date:

ஆப்கானின் காபூலில் சிக்கிய மக்களை ஏற்றிக் கொண்டு சென்ற உக்ரைன் நாட்டு விமானம் நடுவானில் ஆயுத மேந்திய தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது, அந்த விமானம் ஈரான் நோக்கி சென்றது என்ற தகவலை உக்ரைனின் உக்ரேனிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளார்.

எனினும், துணை வெளியுறவு அமைச்சரே விமானம் கடத்தப்பட்டதாக முன்னதாக தெரிவித்திருந்தார்.

ரஷ்ய செய்தி நிறுவனம் TASS செவ்வாய்க்கிழமை, உக்ரைனின் துணை வெளியுறவு அமைச்சர் யெவ்னி யெனினை மேற்கோள் காட்டி விமானம் “திருடப்பட்டது” என்று கூறியது.

“கடந்த ஞாயிறு, எங்கள் விமானம் மற்றவர்களால் கடத்தப்பட்டது. விமானம் நடைமுறையில் எங்களிடமிருந்து திருடப்பட்டது,  அது உக்ரேனியர்களை ஏற்றுவதற்கு பதிலாக அடையாளம் தெரியாத பயணிகளுடன் ஈரானுக்குள் பறந்தது“ என
உக்ரைனின் துணை வெளியுறவு அமைச்சர் யெவ்னி யெனின் கூறியதாக TASS தெரிவித்தது.

வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒலெக் நிகோலென்கோ இன்று செவ்வாய்க்கிழமை தெரிவிக்கையில், விமானம் கடத்தப்பட்ட செய்தியை மறுத்தார்.

எரிபொருள் நிரப்புவதற்காக விமானம் நாட்டில் நிறுத்தப்பட்டதாக ஈரானின் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.

31 உக்ரேனியர்கள் உட்பட 83 பேருடன் ஒரு இராணுவ போக்குவரத்து விமானம் ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தானிலிருந்து கியேவுக்கு வந்தது. 12 உக்ரேனிய இராணுவ வீரர்கள் நாடு திரும்பியதாக உக்ரைன் ஜனாதிபதி அறிவித்துள்ளார். இன்னும் 100 பேர் வெளியேறுவதற்காக ஆப்கானில் காத்திருக்கிறார்கள் என்றார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எண்ணெய் உற்பத்தியை குறைத்த ஈரான்

அமெரிக்காவின் ஹோர்முஸ் ஜலசந்தி முற்றுகையால் ஏற்பட்ட அதிகரித்து வரும் சேமிப்பு நெருக்கடியைச்...

கிளிநொச்சியில் பிளாஸ்டிக் துப்பாக்கியுடன் மே தினத்திற்கு வந்தவர் கைது!

மே 1 அன்று கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகே நடைபெற்ற மே...

மனவைி விவகாரத்து கோரியதனால்  கோபத்தில்  தென்னைகளை வெட்டி வீழ்த்திய கணவன்

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் மூன்று பெண் பிள்ளைகளின் தாயான பெண்ஒருவர் தனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்