குருநகர் வாள்வெட்டில் உயிரிழந்த இளைஞனிற்கு கொரோனா: உறவினர்கள் கொந்தளிப்பால் வைத்தியசாலையில் பரபரப்பு!

Date:

யாழ்ப்பாணம், குருநகரில் வாள்வெட்டு தாக்குதலில் உயிரிழந்த இளைஞனிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

எனினும், வைத்தியசாலை நிர்வாகத்தின் அறிவிப்பிற்கு இளைஞனின் உறவினர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிப்பதால், வைத்தியசாலையில் கொந்தளிப்பான நிலைமை ஏற்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பு பணியில் பொலிசாரும், இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.

குருநகர், சுகவாழ்வு சிகிச்சை நிலையத்திற்கு அண்மையில் கடந்த 22ஆம் திகதி வாள்வெட்டு தாக்குதலிற்கு இலக்கான 5 இளைஞர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் படுகாயமடைந்த எட்மண்ட் ஜெரன் (24) என்ற இளைஞன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

அவரது சடலத்தின் மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் சோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக, வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனினும், கடந்த 22ஆம் திகதி அந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் சோதனையில், இளைஞனிற்கு எதிர்மறையான முடிவு கிடைத்ததாக தெரிவித்து, உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் கொந்தளித்துள்ளனர். இதனால் வைத்தியசாலையில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

அங்கு பாதுகாப்பு பணியில் பொலிசாரும், இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இளைஞனின் சடலத்தின் மாதிரிகளில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுமென தெரிகிறது.

spot_imgspot_img

More like this
Related

ஈரானிடம் இன்றும் 21,22 சதவீத ஏவுகணை இருக்கலாம்: ட்ரம்ப்

ஈரானிடம் இன்னும் “21, 22 சதவிகித” ஏவுகணைகள் எஞ்சியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி...

பாடகரை விடுவிக்கக்கோரி போராட்டம்

சொல்லிசை பாடகர் சங்கீதன் 02.06.2026 அன்று பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது...

விலாசம் கேட்பது போல நடித்து வில்லங்கம்: சிறுமி கடத்தப்பட்டு சீரழிப்பு; புடவைக்கடைக்காரர்கள் கைவரிசை!

வீட்டில் இருந்த சிறுமி விலாசம் கேட்டு அழைக்கப்பட்டு வாய் பொத்திய நிலையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்