ரோஜா சீரியல் தற்போது சின்னத்திரை டிஆர்பியில் டாப் இடத்தில் இருந்து வருகிறது. ரோஜாவுக்கு பாரதி கண்ணம்மாவுக்கும் தான் டிஆர்பியில் முதலிடத்திற்கான போட்டி இருந்து வருகிறது. மேலும் அதிகமாக பாப்புலர் ஆன சீரியல் கதாபாத்திரங்கள் டாப் 5 லிஸ்டை சமீபத்தில் ஓர்மக்ஸ் வெளியிடப்பட்டது. அதில் ரோஜா தான் முதலிடம் பிடித்தார். இரண்டாம் இடத்தில் அர்ஜுன் கதாபாத்திரம் இருக்க கண்ணம்மாவுக்கு மூன்றாம் இடம் தான் கிடைத்தது.
தற்போது தற்போது ரோஜா சீரியல் 900 எபிசோடுகளை கடந்து செல்கிறது. அதற்காக ரோஜாவாக நடித்து வரும் பிரியங்கா நல்காரி பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் தான் மிகவும் எமோஷ்னலாக ஆன விஷயம் பற்றி பேசுகிறார். “சீரியலில் பாட்டி அவரை அனாதை என அடிக்கடி சொல்லும் போதும், தான் அம்மா பற்றி எமோஷ்னலாக பேசும்போது நான் நிஜமாகவே எமோஷ்னல் ஆகி விடுவேன், நிஜமாகவே கண்களில் இருந்து கண்ணீர் வரும்” என்று அவர் கூறி உள்ளார்.
ரோஜா சீரியலில் நடிக்கத் தொடங்கும் போது தமிழ் தெரியாமல் திணறியதாகவும், தற்போது நன்றாக தமிழ் பேச பழகி இருப்பதாகவும் பிரியங்கா நல்காரி கூறுகிறார்.
மேலும் 900 எபிசோடுகளை கடந்து செல்லும் ரோஜா சீரியல் 1000 எபிசோடுகளை கடக்கும்போது அதை பிரம்மாண்டமாக கொண்டாடலாம் என கூறப்படுகிறது.




