மன்னாரில் 20 நாளில் 356 தொற்றாளர்கள்!

Date:

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லுகின்ற நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை(20) மாலை மேலும் புதிதாக 29 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் இன்று சனிக்கிழமை (21) காலை விடுத்துள்ள கொரோனா நிலவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை(20) மாலை மேலும் 29 கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வந்த போது மேற்கொள்ள பீ.சி.ஆர்.பரிசோதனைகளின் 16 தொற்றாளர்களும், சமூகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆன்டிஜன் பரிசோதனைகளின் போது 13 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் முசலி பிரதேசச் செயலகத்தில் 4 தொற்றாளர்களும், நானாட்டான் பிரதேச சபையில் 2 தொற்றாளர்களும், விடத்தல் தீவு பிரதேச வைத்தியசாலையில் 2 தொற்றாளர்களும், தலைமன்னார் பிரதேச வைத்தியசாலையில் 2 தொற்றாளர்களும், மன்னார் ஆடைத் தொழிற்சாலையில் 2 தொற்றாளர்களும், முருங்கன் தள வைத்தியசாலையில் 1 தொற்றாளர் இவ்வாறு ஆன்டிஜென் பரிசோதனை மூலம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இம் மாதம் முதலாம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை 356 கொரோனா தொற்றாளர்களும், இவ்வருடம் மாத்திரம் 1380 தொற்றாளர்களும், மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 1397 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் தற்போது வரை 13 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளது என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மட்டு சிறையிலிருந்து கைதி தப்பியோட்டம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்ற சிறைக்கைதி ஒருவர் இன்று வியாழக்கிழமை (14)...

விஜய்யை வாழ்த்தியதால் அநுரவுக்கு வந்த சிக்கல்!

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அனுர...

கோட்டாவின் கொடூர பழிவாங்கலுக்கு பரிகாரம்: ஷானி அபேசேகரவிற்கு பதவி உயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இயக்குநரான ஷானி அபேசேகரவை, காவல்துறை பிரதிப் பொலிஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்