Pagetamil
இலங்கை

எரிவாயு, பால்மாவுடன் சபைக்கு வந்த வலி.தென்மேற்கு பிரதேசசபை உறுப்பினர்கள்!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் சபையின் தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன் தலைமையில் பிரதேச சபையின் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது சமையல் எரிவாயு, பால்மா மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தினையுப் தட்டுப்பாட்டினையும் கண்டித்து சபை மண்டபத்தில் கவனயீர்ப்பு இடம்பெற்றது.

சமையல் எரிவாயு, பால்மா போன்றவற்றினையும் சபை உறுப்பினர்கள் சபைக்கு கொண்டு வந்திருந்த அதே வேளை பதாதைகளையும் சபை உறுப்பினர்கள் கையில் ஏந்தியிருந்தனர்.

இன்றைய அமர்வின்போது நாடு முடக்கப்படுமானால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு பிரதேச சபையின் சுமார் 50 லட்சம் ரூபா பெறுமதியான நிதியினை மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதிக்கவேண்டும் என்ற பிரேரணை ஒன்றும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு, பிரேரணை ஆளுநரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

கடந்த அமர்வின்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஒருவர், தனிமைப்படுத்தல் காரணமாக சபை அமர்வில் பங்குபற்றாத உறுப்பினர்கள் சிலர் தொடர்பாக தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர், ஐக்கிய தேசிய கட்சி உறுப்பனர் மற்றும் ஈழ மக்கள் ஐன்னாயக கட்சி உறுப்பினர் இடையே கடும் விவாதம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்

வடக்கு அரச உத்தியோகத்தர்களின் கவனத்துக்கு: அலுவலகம் போகும்போது இடைநடுவில் நிற்கும் அபாயத்தை தவிர்க்க!

Pagetamil

நல்லூர் கந்தன் வடக்கு நுழைவாயில் வீதி வளைவுக்கு அடிக்கல்

Pagetamil

ஆற்றங்கரையோரம் ஒய்யாரமாக தூங்கும் யானைகள்

Pagetamil

பலாலி- வசாவிளான் வீதி கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டதால் நாமலுக்கு வந்த கவலை!

Pagetamil

‘எங்கள் ஆட்கள் யாராவது இராணுவத்துடன் சேர்ந்து இயங்கியதை நிரூபிக்க முடியுமா?’: கருணா விடும் புது ‘கப்சா’!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!