புலிகளின் புதையல் தோண்ட முயற்சித்த இருவர் கைது!

Date:

கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அழகாபுரி பகுதியில் விடுதலைப் புலிகளின் புதையல் தோண்ட முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 8.15 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியாவைச் சேர்ந்த இருவர், யாழ்ப்பாணம், விசுவமடுப் பகுதிகளைச் சேர்ந்த தலா ஒவ்வொருவர் கைது செய்யப்பட்டதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதானவர்களிடம் இருந்து புதையல் இருப்பதைக் கண்டுபிடிப்பதற்கு பயன்படுத்தப்படும் ஸ்கானர் கருவி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். கைதானவர்கள் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஆங் சான் சூ கீ வீட்டுக்காவலுக்கு மாற்றப்படவுள்ளார்

மியான்மரின் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ,...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி மைத்திரிக்கு முன்னரே தெரியும்!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு முன்னரே...

முக்கிய பல ஊழல் வழக்குகள் இந்த வருடம் விசாரிக்கப்படும்!

ஊழல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரப்படுத்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்