பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி!

Date:

சூரியவெவ வெவேகம வீதியில் மகாவெலிகடர சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு கொள்ளையர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திஸ்ஸமஹாராம, தெபரவெவ பகுதியில் தங்க நகை கொள்ளை இடம்பெறுவதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் அவர்களை கைது செய்ய முயன்றனர்..

சூரியாவெவ பொலிஸ் குழுவினர் கொள்ளையர்களை துரத்திச் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், பொலிசார் நடத்திய பதில் தாக்குதலில் அவர்கள் படுகாயமடைந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.

இதன்போது, பொலிஸ் ஜீப்பும் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியது. இதில் 5 பொலிசார் காயமடைந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

நாடாளுமன்றத்தில் எனது இறுதிநாட்கள் இவை: ஊசி அர்ச்சுனா!

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற...

ஹோமாகம தலைக்கவச தொழிற்சாலையில் தீ: 5 பேர் பலி

இன்று காலை (21), ஹோமாகம தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவசத் தொழிற்சாலை ஒன்றில்...

அதிபர்களுக்கு அநீதி : கிழக்கு ஆளுநர் செயலகம் முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கியது!

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக கடமைநிறைவேற்று அதிபர்களாக பணியாற்றி வரும் கல்வியாளர்களுக்கு இழைக்கப்பட்டுவரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்