திருமணத்திற்குப் பிறகும் நடிப்புக்கு எந்த தடையுமில்லை : கணவரைப் புகழ்ந்த காஜல்

Date:

கடந்த ஆண்டு தனது பத்து ஆண்டுகால நண்பரான கவுதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார் காஜல் அகர்வால். அதோடு திருமணத்திற்கு பிறகும் நடிப்புக்கு எந்த தடையுமில்லை என்று அறிவித்தவர் தொடர்ந்து நடித்தும் வருகிறார். தமிழில் இந்தியன் -2, ஹேய் சினாமிகா, கோஷ்டி, கருங்காப்பியம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா மற்றும நாகார்ஜூனாவுடன் ஒரு படத்தில் நடித்து வருபவர், ஹிந்தியில் உமா என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வாரங்கல்லில் ஒரு ஷோரூம் திறப்பு விழாவிற்கு வந்த காஜல் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திருமணத்திற்கு பிறகும் தன்னை சினிமா உலகம் ஆதரித்து வருவதை பெருமையாக சொல்லிக் கொண்டவர், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிசியாக இருந்தார்.

அதோடு, தெலுங்கில் மேலும் இரண்டு மெகா பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அதுகுறித்த தகவலை விரைவில் வெளியிடுவேன் என்று கூறியுள்ள காஜல், இப்படி நான் தொடர்ந்து சினிமாவில் பிசியாக நடித்து வருவதற்கு முதல் காரணமே எனது கணவர் கவுதம் தான். அவரது ஆதரவினால் தான் அதிகமான படங்களில் என்னால் கமிட்டாக முடிகிறது. தொடர்ந்து அவரது ஆதரவின் மூலம் சினிமாவில் இன்னும் பெரிய அளவில் சாதிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் விலையில் நிவாரணம்? உலக எண்ணெய் விலை சரிவால் அரசின் முக்கிய அறிவிப்பு

உலக சந்தையில் எண்ணெய் விலை சரிவு: விரைவில் எரிபொருள் விலை நிவாரணம்...

மட்டக்களப்பில் ,இந்த வருடத்தில் டெங்கு நோயால் முதன் முதலாக இளம் தாய் உயிரிழப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காச்சலுடன் அனுமதிக்கப்பட்ட 26 வயதுடைய வாழைச்சேனையை சேர்ந்த...

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு: ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்!

ஈழத்து தமிழ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இலங்கை மட்டக்களப்பு மண்ணில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்