வீடொன்றை தனிமைப்படுத்திய போது, பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திக்வெல்ல, கொன்தெனிய பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.
கொரோனா தொற்றினால் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, வீடொன்றை தனிமைப்படுத்திய போது, ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.




