31.3 C
Jaffna
March 28, 2024
இலங்கை

யாழில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி: ஆபத்தான வேலையில் பணிக்கமர்த்தப்பட்டாரா?

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பால்பண்ணை பகுதியில் புதிய கட்டடம் ஒன்றில் மின்னிணைப்பு வேலையில் ஈடுபட்டிருந்த 17 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று (13) அதிகாலை இடம்பெற்றது.

குருநகர் பகுதியை சேர்ந்த கோபு விஜித் (17)  என்பவரே உயிரிழந்தவராவார்.

தனியார் கட்டட ஒப்பந்த காரர் ஒருவரின் கீழ் அந்த சிறுவன் வேலையில் ஈடுபட்டிருந்த போது இந்த அனர்த்தம் நடந்தது.

புதிய கட்டடத்தில் மின் இணைப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாகவும், 17 வயதான சிறுவனை ஆபத்தான வேலைகளில் அமர்த்தியமை தொடர்பாகவும் பொலிசார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தனிநபர் செலவீனம் அதிகரிப்பு

Pagetamil

ரொஷான் ரணசிங்க வழக்கை விசாரிக்க புதிய நீதிபதிகள் குழு!

Pagetamil

புத்தரின் படம் பொறித்த முடிவெட்டும் இயந்திரத்தை வைத்திருந்தவர் கைது!

Pagetamil

நுவரெலியாவில் சிக்கிய பெரும் போதைப்பொருள் கடத்தல்காரன்

Pagetamil

முல்லைத்தீவு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீதி விபத்தில் பலி

Pagetamil

Leave a Comment