முதல் முறையாக கோட்டையில் கொடி ஏற்ற உள்ளார் மு.க. ஸ்டாலின்

Date:

நாடு முழுவதும் 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு, ரெயில் நிலையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு, பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக முதல்வராக பதவியேற்றுள்ள மு.க. ஸ்டாலின் முதல் முறையாக கோட்டையில் கொடி ஏற்ற உள்ளார். இதனால் கோட்டை கொத்தளத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்துடன் நவீன சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுதந்திர தினத்தை ஒட்டி 33 பேருக்கு முதல்வரின் சிறப்பு பதக்க விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மக்கள் நல்வாழ்வுத்துறையில் 9 பேர், காவல்துறையில் 3 பேர் , தீயணைப்பு துறையில் 3 பேருக்கு முதல்வர் சிறப்புப் பதக்கம் வழங்கப்பட உள்ளது.

நகராட்சி நிர்வாகத் துறையில் 6 பேர், வருவாய் பேரிடர் மேலாண்மை துறையில் 3 பேருக்கு சிறப்புப் பதக்கம் அளிக்கப்படவுள்ளன. கூட்டுறவுத்துறையில் 3 பேர், ஊராட்சித்துறையில் 6 பேருக்கு முதல்வர் சிறப்புப் பதக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தில்ஷான் மதுஷங்கவை ஒப்பந்தம் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

காயம் காரணமாக விலகிய பிரைடன் கார்ஸுக்குப் பதிலாக தில்ஷான் மதுஷங்கவை சன்ரைசர்ஸ்...

அமெரிக்க முற்றுகையை கடந்து சென்ற ஈரானிய கப்பல்கள்

அமெரிக்க இராணுவத் தடையையும் மீறி, ஈரானியத் துறைமுகங்களிலிருந்து பயணித்த குறைந்தது இரண்டு...

மறுவாழ்வு மையத்தில் சேர்ந்தார் பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ்

மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கைது செய்யப்பட்ட பாப் பாடகியும் நடிகையுமான பிரிட்னி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்