நேற்று 2,987 பேருக்கு தொற்று!

Date:

நேற்று 2,987 தொற்றாளர் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 342,079 ஆக உயர்ந்துள்ளது.

நேற்றைய தொற்றாளர்களில் 2,890 பேர் புத்தாண்டு COVID-19 கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து அண்மையில் நாட்டிற்கு வந்த 97 நபர்களுக்கும் நேற்று COVID-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

நாடு முழுவதும் பல மையங்களில் தற்போது 36,333 பேர் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று, COVID-19 இலிருந்து குணமடைந்த 2,244 நபர்கள் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 300,406 ஆக உயர்ந்துள்ளது.

COVID-19 தொற்று சந்தேகத்தில் 3,697 பேர் தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

இதேவேளை, நேற்று ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான COVID-19 இறப்புகளை இலங்கை உறுதிப்படுத்தியது. நேற்று 124 இறப்புகள் பதிவாகியுள்ளன, நாட்டின் இறப்பு எண்ணிக்கை 5,464 ஆக அதிகரித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

விக்ரமரத்னவின் மரணம் குறித்த இறுதி முடிவு விரைவில்

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்த இறுதித் தீர்ப்பு,...

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் புதிய வாகன பாதுகாப்பு ஸ்டிக்கர் திட்டம் அறிமுகம்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அதிகரித்து வரும் மோட்டார் சைக்கிள் திருட்டுகள்,...

சங்கானையில் வீட்டுக்குள் இளைஞர் சடலமாக மீட்பு

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து துர்நாற்றம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்