29.5 C
Jaffna
March 28, 2024
இலங்கை

வவுனியா பூந்தோட்டம் சந்தியில் வீதிகளில் பயணிப்போரை வழி மறித்து பிசீஆர் பரிசோதனை

வவுனியா பூந்தோட்டம் சந்தியில் வீதிகளில் பயணிப்போரை வழி மறித்து சுகாதார பிரிவினரால் பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா மாவட்டத்தில் ஒரே நாளில் இராணுவத்தினர் மற்றும் வைத்தியர்கள் உட்பட 76 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த இரண்டு தினங்களில் மாத்திரம் நாட்டில் 229 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் கோவிட் தொற்றாளர்களை இணங்கண்டு மாவட்டத்தில் கோவிட் தொற்றை கட்டுப்படுத்தும் செயற்பாட்டில் சுகாதார பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வவுனியா பூந்தோட்டம் சந்தியில் இன்று (11) காலை எழுமாற்றாக பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

வீதியில் அத்தியாவசிய தேவையின்றி பயணிப்போர், சீரான முறையில் முகக்கவசம் அணியாதவர்கள், சுகாதார முறைகளை பின்பற்றாதவர்கள், பேரூந்தில் சமூக இடைவெளியின்றி பயணித்தோர் என 200 க்கு மேற்பட்டவர்களை சுகாதார பிரிவினர் வழிமறித்து பிசீஆர் பரிசோதனை முன்னெடுத்திருந்தனர்.

அவர்களது பிசீஆர் முடிவுகளையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

Leave a Comment