வவுனியா பூந்தோட்டம் சந்தியில் வீதிகளில் பயணிப்போரை வழி மறித்து பிசீஆர் பரிசோதனை

Date:

வவுனியா பூந்தோட்டம் சந்தியில் வீதிகளில் பயணிப்போரை வழி மறித்து சுகாதார பிரிவினரால் பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா மாவட்டத்தில் ஒரே நாளில் இராணுவத்தினர் மற்றும் வைத்தியர்கள் உட்பட 76 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த இரண்டு தினங்களில் மாத்திரம் நாட்டில் 229 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் கோவிட் தொற்றாளர்களை இணங்கண்டு மாவட்டத்தில் கோவிட் தொற்றை கட்டுப்படுத்தும் செயற்பாட்டில் சுகாதார பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வவுனியா பூந்தோட்டம் சந்தியில் இன்று (11) காலை எழுமாற்றாக பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

வீதியில் அத்தியாவசிய தேவையின்றி பயணிப்போர், சீரான முறையில் முகக்கவசம் அணியாதவர்கள், சுகாதார முறைகளை பின்பற்றாதவர்கள், பேரூந்தில் சமூக இடைவெளியின்றி பயணித்தோர் என 200 க்கு மேற்பட்டவர்களை சுகாதார பிரிவினர் வழிமறித்து பிசீஆர் பரிசோதனை முன்னெடுத்திருந்தனர்.

அவர்களது பிசீஆர் முடிவுகளையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

விக்ரமரத்னவின் மரணம் குறித்த இறுதி முடிவு விரைவில்

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்த இறுதித் தீர்ப்பு,...

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் புதிய வாகன பாதுகாப்பு ஸ்டிக்கர் திட்டம் அறிமுகம்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அதிகரித்து வரும் மோட்டார் சைக்கிள் திருட்டுகள்,...

சங்கானையில் வீட்டுக்குள் இளைஞர் சடலமாக மீட்பு

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து துர்நாற்றம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்