நிபந்தனைகளை நிறைவேற்றிய டுவிட்டர். அறிக்கையாக தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Date:

‘தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் புதிய நிபந்தனைகளை ‘டுவிட்டர்’ சமூக வலைதளம் நிறைவேற்றியுள்ளது’ என, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்கள், சமூக வலைதளங்களை கட்டுப்படுத்தும் வகையில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ஏற்க அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும் டுவிட்டர் நிறுவனம் மறுத்தது. மத்திய அரசுடன் மோதல் போக்கில் ஈடுபட்டது.

சட்ட விதிகளை பின்பற்றாத டுவிட்டர் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டார் ஜெனரல் சேதன் சர்மா, ”குறைதீர் அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளை நியமித்து தகவல் தொழில்நுட்ப சட்ட நிபந்தனைகளை டுவிட்டர் நிறுவனம் நிறைவேற்றியுள்ளது,” என்றார். அதைத் தொடர்ந்து, இதை அறிக்கையாக தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

2 சிப்பாய்கள் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்கா!

இஸ்லாமியக் குடியரசுடன் மீண்டும் தொடங்கிய மோதல்களுக்குப் பிறகு ஏற்பட்ட முதல் அமெரிக்க...

வருமானவரி செலுத்தாதவர்கள் மீது சட்டநடவடிக்கை

தங்கள் குறிப்பிட்ட வருமான வரி கடமைகளை வேண்டுமென்றே நிறைவேற்றத் தவறும் தனிநபர்கள்...

தமிழகத்தில் சட்டவிரோத செயற்பாட்டில் த.வெ.க பிரமுகர்கள்

அரசியல்வாதிகள் தங்களது வாகனங்களில் பதிவெண்ணுக்கு பதில் கட்சியின் பதவிப் பலகையும், கட்சிக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்