நிபந்தனைகளை நிறைவேற்றிய டுவிட்டர். அறிக்கையாக தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Date:

‘தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் புதிய நிபந்தனைகளை ‘டுவிட்டர்’ சமூக வலைதளம் நிறைவேற்றியுள்ளது’ என, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்கள், சமூக வலைதளங்களை கட்டுப்படுத்தும் வகையில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ஏற்க அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும் டுவிட்டர் நிறுவனம் மறுத்தது. மத்திய அரசுடன் மோதல் போக்கில் ஈடுபட்டது.

சட்ட விதிகளை பின்பற்றாத டுவிட்டர் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டார் ஜெனரல் சேதன் சர்மா, ”குறைதீர் அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளை நியமித்து தகவல் தொழில்நுட்ப சட்ட நிபந்தனைகளை டுவிட்டர் நிறுவனம் நிறைவேற்றியுள்ளது,” என்றார். அதைத் தொடர்ந்து, இதை அறிக்கையாக தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

40 ஆண்டுகளின் பின் ஈரானுக்குள் அமைதியாக நடக்கும் அதிகார மாற்றம்: மதகுருமாரை பின்தள்ளி ஆதிக்கம் செலுத்தும் இராணுவம்!

த நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு விரிவான அறிக்கையின்படி, ஈரானின் முடிவெடுக்கும்...

அம்பியூலன்ஸ் மெதுவாக சென்றதால் பொலிஸ்காரர் உயிரிழப்பா?: பௌத்த பிக்கு குற்றச்சாட்டு

திருகோணமலை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஏற்றிச்...

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம்: ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்