கோவிட் -19 தடுப்பூசிகளில் ஈடுபட்டுள்ள இராணுவ மருத்துவப் பிரிவினர் மருத்துவக் கல்வியைப் பெற்றுள்ளனர் என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன கூறுகிறார்.
மருத்துவ கல்வி கற்காத குழு தடுப்பூசி போடுவதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவது ஆதாரமற்றது என்று பாதுகாப்பு செயலாளர் கூறினார்.
ஜெனரல் குணரத்ன நேற்று நடந்த ஊடக சந்திப்பில் பேசுகையில், தடுப்பூசி செலுத்தும் திட்டத்திற்கு பீரங்கிப் படை ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை என்றும், தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் பயப்பட வேண்டாம் என்றும் கூறினார்.
சுகாதாரத் துறை ஊழியர்களால் தொடங்கப்பட்ட வேலைநிறுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து, தடுப்பூசி திட்டத்தில் இலங்கை இராணுவ மருத்துவப் படையினர் இணைக்கப்பட்டதாக பாதுகாப்புச் செயலாளர் கூறினார்.
2,000-3,000 என செலுத்தப்பட்ட நாளாந்த தடுப்பூசிகள் 500,000 ஆக அதிகரிக்கப்பட்டது என்றார்.



