விபத்தில் சிக்கிய விசுவமடு இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Date:

விசுவமடு நகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் யாழ் போதான மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (07) உயிரிழந்துள்ளார்.

விசுவமடு மாணிக்கபுரத்தினை சேர்ந்த சசிக்குமார் தனோஜிகன் (19) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

இந்த இளைஞன் கடந்த ஜூலை 29ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்ற போது, ஹயஸ் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். படுகாயமடைந்த நிலையில்இதனை தர்மபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இளைஞன், மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த விபத்தினை தொடர்ந்து ஹயஸ் வாகனம் புதுக்குடியிருப்பு பொலிசாரால் பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் காயமடைந்து இளைஞன் சிகிச்சை பெற்ற வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

நாடாளுமன்றத்தில் எனது இறுதிநாட்கள் இவை: ஊசி அர்ச்சுனா!

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற...

ஹோமாகம தலைக்கவச தொழிற்சாலையில் தீ: 5 பேர் பலி

இன்று காலை (21), ஹோமாகம தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவசத் தொழிற்சாலை ஒன்றில்...

அதிபர்களுக்கு அநீதி : கிழக்கு ஆளுநர் செயலகம் முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கியது!

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக கடமைநிறைவேற்று அதிபர்களாக பணியாற்றி வரும் கல்வியாளர்களுக்கு இழைக்கப்பட்டுவரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்