பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவும் உணவுகள்.

Date:

பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவும் உணவுகள் என்னென்ன … தவிர்க்க வேண்டியவை என்னென்ன …

நாம் உண்ணும் உணவை பொறுத்து குடலில் புற்றுநோய்க்கான அபாயமானது மாறுவது தெரியுமா? பெருங்குடலுக்கு நன்மை பயக்கும் சில உணவுகளின் காரணமாக புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயமானது குறைகிறது. எனவே அந்த உணவுகளின் நன்மைகள் குறித்து இப்போது பார்ப்போம்.

உணவு உண்ணும் பழக்கமானது உடலில் பல விஷயங்களை மாற்றி அமைக்கிறது. உடல் எடை அதிகரிப்பில் துவங்கி பல உடல் ஆரோக்கியங்களுக்கு நாம் உணவில் கவனம் செலுத்தாததே முக்கிய காரணமாக உள்ளது. உணவானது உடலுக்கு ஆற்றல் தர கூடியது. நாம் சரியான உணவுகளை எடுத்து பட்சத்தில் நல்ல வகையான ஆற்றலையும் ஆரோக்கியத்தையும் பெற முடியும். ஆனால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை உண்ணும்போது அவை மொத்த உடலிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஆய்வு:

தற்சமயம் வெளியான ஒரு ஆய்வின்படி அதிகமாக இறைச்சி உண்பது பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த அபாயமானது இளைஞர்களுக்கு அதிகமாக உள்ளது என கூறப்பட்டுள்ளது. எனவே பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தில் இருந்து தப்பிக்க நினைப்பவர்கள் தங்கள் உணவு பழக்கம் மீது கவனம் செலுத்த வேண்டியது முக்கியமாகும்.

அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி அமைப்பு இதைப் பற்றி கூறும்போது ஆண் மற்றும் பெண்களுக்கு பரவும் பொதுவான புற்றுநோய்களில் இது மூன்றாவது இடத்தில் உள்ளது என கூறப்பட்டுள்ளது. இரண்டு பொதுவான உணவுகள் இதற்கு அதிக காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

உணவு பழக்கத்தால் ஏற்படும் புற்றுநோய்கள்:

நேச்சர் கம்யூனிகேஷன் என்ற மற்றொரு இதழில் வெளியான ஒரு ஆய்வில் கடந்த காலத்தில் நடத்தப்பட்ட 860 ஆராய்ச்சிகளை மதிப்பீடு செய்து தனி மனிதர்களின் உணவு உண்ணும் பழக்கம் குறித்து ஒரு முடிவை பெற்றவர். அதாவது தனி மனிதனின் உணவு பழக்கமானது மனிதனுக்கு ஏற்படும் 11 வகையான புற்றுநோய்களுடன் தொடர்புடையதாக உள்ளது.

பெருங்குடல் புற்றுநோய், வாய் புற்றுநோய், உணவு குழாய் புற்றுநோய், வயிறு புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், பித்தப்பை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், தோல் புற்றுநோய், பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய், சிறுநீரகம் மற்றும் சிறுநீர் பை புற்றுநோய். இத்தனை புற்றுநோய்களும் நமது உணவு பழக்கத்தைப் பொருத்து ஏற்படுபவையாக உள்ளன.

தொடர்புடைய உணவுகள்

நாம் உண்ணும் உணவுகளே புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணமாக உள்ளது. மேலும் இந்த 11 புற்றுநோய்களில் அதிகமான புற்றுநோய்கள் நமது செரிமான அமைப்பு சார்ந்ததாக இருப்பதை காண முடியும். ஆல்கஹால் புற்றுநோய் ஏற்படுவதற்கு வலுவான தொடர்புடைய ஒரு பானமாகும். அதே போல சிவப்பு இறைச்சியும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை கொண்டுள்ளது. எனவே பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை தவிர்க்க இந்த உணவுகளை குறைவாக பயன்படுத்தவும்.

அபாயத்தைக் குறைக்க

பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவும் சில உணவுகளையும் ஆராய்ச்சியாளர்களையும் கண்டறிந்துள்ளனர். முழு தானியங்கள் மற்றும் பால் இரண்டும் பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவுகின்றன. அதாவது இந்த இரண்டு உணவுகளையும் அதிகமாக உண்ணும் நபர்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன. தினமும் பால் மற்றும் முழு தானியங்கள் உண்பது பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை குறைப்பதோடு உடல் ஆரோக்கியத்திற்கும் பயன்படுகிறது.

ஆரோக்கிய உணவுகள்

மற்ற புற்றுநோய்களை சரி செய்வதில் பழங்கள் நமக்கு உதவுகின்றன. பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது தொண்டை புற்றுநோயை சரி செய்ய உதவுவதாகும். வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் கொண்ட பழங்கள் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்க உதவுகிறது. அதே போல நாம் தினமும் அருந்தும் காபியானது கல்லீரல் புற்றுநோய் உடலில் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது.

பெருங்குடல் புற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சில உணவுகள் உங்களுக்கு பிடித்தமான உணவாக இருக்கலாம். உதாரணமாக சிவப்பு இறைச்சிகள் உலகம் முழுவதும் பிரபலமான உணவாக உள்ளது. மேலும் அது பலருக்கு விருப்பமான உணவாக உள்ளது. எனவே நீங்கள் சிவப்பு இறைச்சியை விரும்பக்கூடியவர் எனில் முடிந்தவரை அதை குறைவாக சாப்பிட முயற்சி செய்யுங்கள். மேலும் நீங்கள் தினமும் பால் மற்றும் தானியங்கள் எடுத்துக்கொள்வதன் மூலம் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்க முடியும்.

எனவே இந்த ஆரோக்கிய உணவுகளை நாம் கடைப்பிடிப்பதன் மூலம் நமக்கு உணவின் மூலம் ஏற்படக்கூடிய 11 வகையான புற்றுநோயில் இருந்து நம்மை காத்து கொள்ள முடியும். எனவே புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும் உணவுகளை அதிகமாக எடுத்துக்கொண்டவர்கள் உடனடியாக உங்கள் உணவு பழக்கத்தை மாற்றி அமைப்பது அவர்களுக்கு நன்மை பயக்கும்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்தவர் 9 மாதங்களின் பின்னர் கைது

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்தவர்...

மக்கள் வங்கிக்கொள்ளை: உதவி மேலாளர், பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது!

சமீபத்தில் ஹொரனவில் உள்ள ஒரு அரசு வங்கியில் இருந்து ரூ. 35...

அதிக மக்களை இணைக்கும் ஒரு புதிய அரசியல் இயக்கம்: அண்ணாமலை அறிவிப்பு

“அதிக மக்களை இணைக்கும் ஒரு புதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்