டோக்கியோ ஒலிம்பிக் நிறைவடைந்தது: அமெரிக்கா முதலிடம்!

Date:

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது.

இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு நிறைவு விழாக்களின் போது, சர்வதேச ஒலிம்பிக் சபை தலைவர் தோமஸ் பாக் விளையாட்டுக்கள் நிறைவடைந்ததாக அறிவித்தார். அடுத்த கோடைகால ஒலிம்பிக் போட்டி 2024 இல் பாரிசில் நடைபெறும்.

இந்த ஆண்டு விளையாட்டுப் போட்டிகளை காண ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. இறுதி நிகழ்விலும் ரசிகர்கள் கலந்து கொள்ளவில்லை. வானவேடிக்கையின் பின் ஒலிம்பிக் சுடர் அணைக்கப்பட்டது.

பதக்கப்பட்டியலில் 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலம் என மொத்தம் 113 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடம் பெற்றது.

38 தங்கம், 32 வெள்ளி, 18 வெண்கலம் என 88 பதக்கங்களுடன் சீனா இரண்டாமிடம் பெற்றது.

27 தங்கம் வென்ற ஜப்பான் மூன்றாமிடத்திலும், 22 தங்கம் வென்ற பிரிட்டன் நான்காமிடத்திலும் உள்ளன. 20 தங்கம் வென்ற ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி ஐந்தாமிடத்திலும், 17 தங்கம் வென்ற அவுஸ்திரேலியா ஆறாமிடத்திலும் உள்ளன.

இந்த ஒலிம்பிக்கில் குறிப்பிடப்பட வேண்டியசில சிறப்பம்சங்களில்-

சனிக்கிழமை, பெண்கள் 4X400 மீட்டர் அஞ்சல் ஓட்டத்தில் அமெரிக்கா தங்கப் பதக்கம் வென்றது. போலந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது, ஜமைக்கா வெண்கலத்தைப் பெற்றது.

சிட்னி மெக்லாஹ்லின், டாலிலா முஹம்மது, ஏத்திங் மு மற்றும் அல்லிசன் பெலிக்ஸ் ஆகியோரைக் கொண்ட அமெரிக்க அணி, 3: 16.85 நிமிடங்களில் தங்கத்தை வென்றனர்.

இந்த வெற்றியின் மூலம் அமெரிக்காவின் அல்லிசன் பெலிக்ஸ் தடகளப் போட்டிகளில் தனது 11 வது ஒலிம்பிக் பதக்கத்தை வென்றார். வரலாற்றில் வேறு எந்த பெண்னும், அமெரிக்காவின் எந்த ஆண், பெண்ணும் தடகளத்தில் இந்த சாதனையை படைக்கவில்லை.

400 மீட்டர் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.

35 வயதான ஃபெலிக்ஸ் 2004 ஏதென்ஸ் விளையாட்டுகளில் தனது ஒலிம்பிக் வாழ்க்கையைத் தொடங்கினார்.

முன்னதாக சனிக்கிழமையன்று, கென்யாவின் பெரெஸ் ஜெப்சிர்சீர் 2 மணி நேரம், 27 நிமிடங்கள் 20 வினாடிகளில் மகளிர் மராத்தான் போட்டியில் அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதத்துடன் போராடி ஒலிம்பிக் தங்கத்தை வென்றார்.

2 மணிநேரம், 27 நிமிடங்கள் 36 வினாடிகளில் சக நாட்டவரான பிரிஜிட் கோஸ்கே வெள்ளி வென்றார். அமெரிக்க மோலி சீடெல் 2 மணிநேரம் 27 நிமிடங்கள் 46 வினாடிகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதத்தைத் தவிர்க்கும் முயற்சியில், திட்டமிட்டதை விட ஒரு மணி நேரம் முன்னதாக உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு ஒலிம்பிக் அமைப்பாளர்கள் மகளிர் மராத்தானை தொடங்கினர்.

இருப்பினும், பந்தயத்தின் தொடக்கத்தில், ஓட்டப்பந்தயத்தில் தெளிவான வானமும் 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் மற்றும் ஈரப்பதம் சுமார் 82%இருந்தது. போட்டியின் முடிவில், வெப்பநிலை கிட்டத்தட்ட 30 டிகிரி செல்சியஸாக உயர்ந்தது.

டோக்கியோவிலிருந்து வடக்கே சுமார் 1,100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடலோர நகரமான சோப்போரோவில் நடைபெற்ற இந்த பந்தயத்தில், 88 விளையாட்டு வீரர்களில் 15 பேர் போட்டியை முடிக்கவில்லை.

சனிக்கிழமை பிற்பகல், அமெரிக்க ஆண்கள் கூடைப்பந்து அணி அதன் நான்காவது தொடர்ச்சியான ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது,

தனிநபர் ஜிம்னாஸ்டிக்ஸ் இறுதிப் போட்டியில் இஸ்ரேல் சனிக்கிழமை தங்கப் பதக்கத்தை வென்றது. இந்த நிகழ்வில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ரஷ்ய ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.

spot_imgspot_img

More like this
Related

நாடு முழுவதும் ‘ரடம ஏகட்ட’ விசேட நடவடிக்கை – 700-க்கும் மேற்பட்டோர் கைது

நாடு முழுவதும் நேற்று (ஜூலை 17) முன்னெடுக்கப்பட்ட ‘ரடம ஏகட்ட’ (Ratama...

பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதி, மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு...

கடும் வெப்பம்: பல பகுதிகளில் எச்சரிக்கை நிலை

இன்று (18) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்