மத்துகம மின் மயானத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் நேற்று(6) தகனம் செய்யப்பட்ட காட்சிகள் இவை.
நாட்டில் டெல்டா பிறழ்வு அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என்றும், வெளியில் செல்பவர் சமூக இடைவெளியை பேணி, சுகாதார நடைமுறைகளை பேணும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்களின் விழிப்புணர்வே இந்த அபாய கட்டத்தை கடக்க முடியும்.





