மட்டக்களப்பில் பயங்கரம்: பெண் கடத்தப்பட்டு கொலை; சாக்கில் அடைத்து சந்தையில் வைக்கப்பட்டது!

Date:

வாழைச்சேனையில் நேற்று காணாமல் போன பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

அந்தப் பெண்ணின் உடல் சாக்கில் அடைக்கப்பட்ட நிலையில், வாழைச்சேனை சந்தையில் வைக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பகுதியை சேர்ந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணே முச்சக்கர வண்டியில் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று பகல் வங்கியொன்றிற்கு சென்றுவிட்டு, ஹாட்வெயார் ஒன்றிற்கு சென்றார். பகல் 12.30 மணியின் பின்னர் காணாமல் போயிருந்தார்.

நேற்று மாலை இருவர் வாழைச்சேனை சந்தைக்குள் உள்ள கடையொன்றின் முன்பாக சாக்கொன்றை வைத்து விட்டு, பார்த்துக் கொள்ளும்படியும், மீண்டும் வந்து எடுப்பதாகவும் கூறிச் சென்றனர்.

எனினும், நீண்டநேரமாகியும் யாரும் வராததையடுத்து சந்தேகமடைந்த கடை உரிமையாளர் பொலிசாருக்கு தகவல் வழங்கினார்.

பொலிசார் மேற்கொண்ட சோதனையில் பெண்ணொருவர் கொல்லப்பட்டு, சாக்கில் அடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக 27 வயதான இளைஞன் உள்ளிட்ட இருவர் சந்தேகத்தில் கைதாகியுள்ளனர்.

 

spot_imgspot_img

More like this
Related

மாவடிப்பள்ளி ஆற்றில் கரை ஒதுங்கிய இனந் தெரியாத ஆண் சடலம்

அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம்...

பாடசாலை மாணவர்களையும் சென்றடைந்த போதைப்பொருள் – இலங்கையின் எதிர்காலத்திற்கு பெரும் ஆபத்து!

போதைப்பொருள் பாவனை நாட்டை சீரழித்து வரும் நிலையில், அது பாடசாலை மாணவர்களையும்...

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்