பொரளை லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் நேற்றைய (05) நிலவரப்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 150 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருவதாக, அந்த மருத்துவமனையின் குழந்தை மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகின்றனர். குழந்தைகள் மருத்துவமனையின் நான்கு விடுதிகளில் குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போதைய நிலையில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட 10 முதல் 12 குழந்தைகள் தினமும் மருத்துவமனைக்கு வருகிறார்கள். இப்போது பாதிக்கப்பட்ட 150 குழந்தைகள் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு வரும், வளர்ந்த குழந்தைகள் ராஜகிரியிலுள்ள குழந்தைகள் நோயாளி மையத்திற்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
குழந்தைகளை தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டியது பெற்றோரின் பொறுப்பு. வீட்டிற்கு செல்லும் பெரியவர்கள் கொரோனா காவியாக இருக்க வேண்டாம். ஏனெனில் பெரியவர்கள்தான் கொரோனாவை வீட்டிற்கு கொண்டு வருகிறார்கள். ஏனென்றால் குழந்தைகளுக்கு கொரோனா வருவது கடினம். இப்போது குழந்தைகளிடையே கொரோனா வேகமாக பரவி வருகிறது. பெரியவர்கள் இரண்டு கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டாலும், நீங்கள் கொரோனாவை வீட்டிற்கு கொண்டு வரலாம். எனவே ஒரு வயது வந்தவராக, இந்த நாட்களில் உங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.



