கொழும்பில் வேகமாக பரவும் டெல்டா!

Date:

கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாடு கொழும்பில் வேகமாக பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் இன்று தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை இயக்குநர் வைத்தியர் சந்திம ஜீவந்தர கூறுகையில், ஜூலை கடைசி வாரத்தில் கொழும்பில் கண்டறியப்பட்ட கோவிட் தொற்றாளர்களில் 75 சதவீதமானவர்கள் டெல்டா வகையால் பாதிக்கப்பட்டவர்கள் என்று ஆய்வக சோதனைகளில் கண்டறிந்துள்ளன என்றார். .

ஜூலை முதல் வாரத்தில் வெறும் 13 சதவீதமானவர்களே டெல்டா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

டெல்டா திரிபு ஆரம்பத்தில் கொழும்பிபு, தெமட்டகொட பகுதியில் மட்டுமே கண்டறியப்பட்டது.

எனினும், பின்னர் கோட்டே, கொலன்னாவ, அங்கொட, நவகமுவ, மஹாபகே, கட்டுநாயக்க, நீர்கொழும்பு, இரத்மலானை, பேருவளை, காலி, மாத்தறை, தம்புள்ளை, வவுனியா மற்றும் முல்லைத்தீவில் டெல்டா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.

கொரோனா வைரஸின் டெல்டா வகையின் பரவலானது அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமானது என்பதை சுகாதார அமைச்சு பின்னர் ஒப்புக்கொண்டது.

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலையில் 2 தமிழ் பெண்கள் கடத்தல் விவகாரம்: கடற்படையின் 2 பெண் உத்தியோகத்தர்கள் கைது!

திருகோணமலையில் 2008-ஆம் ஆண்டு சசிகுமார் தென்மொழி மற்றும் மேரி டெல்ஷியா ஆகிய...

மன்னிப்பு வழங்குமாறு அநுரவிடம் கெஞ்சும் ஞானசாரர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 இல் தனக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி...

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்