பொதுச்சுகாதார பரிசோதகரின் முகத்தில் துப்பியவர் கைது!

Date:

கிரிவுல, புஸ்கொலதெனிய பகுதியில் கொரோனா தொற்றாளரின் வீட்டுக்கு சென்ற பொதுச்சுகாதார பரிசோதகர் மீது, தொற்றாளரின் தந்தை எச்சில் துப்பியுள்ளார்.

சம்பவத்தின் போது சந்தேக நபர் மது போதையில் இருந்ததுள்ளார்.

அந்த வீட்டில் கொரோனா நோயாளி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து பொதுச்சுகாதார பரிசோதகர் அங்கு சென்றார். இதன்போது, சுகாதார பரிசோதகரை தாக்க முயன்ற கொரோனா தொற்றாளரின் தந்தை, அவரது முகத்தில் எச்சில் துப்பினார்.

48 வயதான சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி அதுரகம, பண்டாரகமவில் இதே போன்ற ஒரு சம்பவம் பதிவாகியது. அதில் தொடர்புடையவருக்கு பாணந்துறை நீதவான் நீதிமன்றம் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

பிரதியமைச்சர் எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண எம்.பிக்கு பிடியாணை

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்...

தன்னைத்தானே சுட்டு உயிர்மாய்த்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன உயிரிழந்தார் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன்...

13வது வாரமாகவும் தொடரும் வலி. வடக்கு காணி மீட்புப் போராட்டம்

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்