கிரிவுல, புஸ்கொலதெனிய பகுதியில் கொரோனா தொற்றாளரின் வீட்டுக்கு சென்ற பொதுச்சுகாதார பரிசோதகர் மீது, தொற்றாளரின் தந்தை எச்சில் துப்பியுள்ளார்.
சம்பவத்தின் போது சந்தேக நபர் மது போதையில் இருந்ததுள்ளார்.
அந்த வீட்டில் கொரோனா நோயாளி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து பொதுச்சுகாதார பரிசோதகர் அங்கு சென்றார். இதன்போது, சுகாதார பரிசோதகரை தாக்க முயன்ற கொரோனா தொற்றாளரின் தந்தை, அவரது முகத்தில் எச்சில் துப்பினார்.
48 வயதான சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி அதுரகம, பண்டாரகமவில் இதே போன்ற ஒரு சம்பவம் பதிவாகியது. அதில் தொடர்புடையவருக்கு பாணந்துறை நீதவான் நீதிமன்றம் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது குறிப்பிடத்தக்கது.




