கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 94 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மைக்காக கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 53,030 என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர், மூத்த டிஐஜி அஜித் ரோஹன கூறினார்.
மேற்கு மாகாணத்தில் 13 நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் மொத்தம் 8,849 நபர்கள் நேற்று சோதனை செய்யப்பட்டனர்.
இவர்களில் , 139 நபர்கள் அத்தியாவசிய காரணங்களின்றி மாகாண எல்லைகளை தாண்டியவர்கள் என அடையாளம் காணப்பட்டு, எச்சரிக்கை செய்யப்பட்ட பின்னர் திருப்பி அனுப்பப்பட்டனர்.



