யாழ்பாண இந்திய துணைத் தூதரகத்தின் புதிய தூதுவராக ராகேஸ் நடராஜ் இன்று தனது அலுவலகத்தில் பதவியேற்றார்.
இதுவரை காலமும் துணைத் தூதுவராக இருந்த பாலச்சந்திரன் பதவியுயர்வு பெற்று வெளிநாடொன்றிற்கான தூதுவராக நியமிக்கப்பட்டதால் புதிய தூதுவர் நியமிக்கப்பட்டார்.
இவ்வாறு புதிய தூதுவராக நியமிக்கப்பட்ட இவர் இந்தியாவின் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதற்கு முன்னர் கண்டி இந்தியா உதவி உயர்தானியாராக பணிபுரிந்தார். இவ்வாறான நிலைமையிலையே யாழ் துணைத்தூதராக நியமிக்கப்பட்ட இவர் இன்றையதினம் தனது கடமைகளை சுப நேரத்தில் பொறுப்பேற்று பதவியேற்றுள்ளார்.




