தமக்கு வழங்கப்பட்ட நியமன கடிதத்திற்கு தமது பணிகளை பொறுப்பேற்க அனுமதிக்குமாறு கோரி இன்றைய தினம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் கடந்த 155 நாட்களாக வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
யாழ் மாவட்டத்திற்கு வந்த விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து கலந்துரையாடி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கொழும்பிற்கு வருமாறும் ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு செய்ததாகவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டோருக்கும் அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பும் இடம்பெற்றது.
சந்திப்பின்போது குறித்த சுகாதார தொண்டர்களை ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்குள் உள்வாங்குவதாகவ தெரிவிக்கப்பட்டதையடுத்து குறித்த போராட்டம் கைவிடப்பட்ட நிலையில் அவர்களுக்குரிய வேலை வாய்ப்பு தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் இன்று வரை மேற்கொள்ளப்படாததன் காரணமாக இன்றைய தினம் போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர்






