விஜய் வீட்டுக்கு சம்பள பாக்கி கேட்டு போன முன்னாள் நிர்வாகிக்கு நேர்ந்த கதி!

Date:

சம்பள பாக்கி இருப்பதாக கூறி, நடிகர் விஜயை குடும்பத்துடன் சந்திக்க வந்த விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள் நிர்வாகியை காவல் நிலையம் அழைத்து சென்ற போலீசார், அவர் அட்வைஸ் செய்து அனுப்பி வைத்தனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரையில் நடிகர் விஜய் வசித்து வருகிறார். இவரது விஜய் மக்கள் இயக்கத்தில் மாநில துணை செயலாளராக குமார் என்பவர் பொறுப்பு வகித்து வந்தார். பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் வேலையும் பார்த்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் விஜய் மக்கள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று குமார் தனது குடும்பத்தினருடன் வந்து விஜயை சந்திக்க வேண்டும் என கூறி விஜய் வீட்டின் முன்பு நின்றுள்ளார்.

விஜய் யாரையும் சந்திக்க முடியாது என மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் விஜய் வீட்டில் இருந்து ஊழியர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் நீலாங்கரை போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்துவிட்டு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து நீலாங்கரை ஆய்வாளர் மகேஷிடம் கேட்டபோது, “சம்பள பாக்கி தொடர்பாக குமார் விஜயை சந்திக்க வந்ததாகவும், விஜய் சந்திக்க மறுத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்ததால் அவரை அங்கிருந்து காவல் நிலையம் அழைத்து வந்து திரும்பிச் செல்ல அறிவுறுத்தினோம்” என்று அவர் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வடக்கு கிழக்கில் தமிழ் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்றார் இந்திய துணை ஜனாதிபதி: சீ.வீ.கே தகவல்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையைக்...

இயந்திர கோளாறு காரணமாகவே தனியார் பேருந்தில் இருந்து பயணிகள் இறக்கப்பட்டார்களாம்!

பயணிகளை இடைநடுவில் தனியார் பேருந்து இறக்கியதாக சமூக வலைத்தளங்களில் எழுந்த குற்றச்சாட்டுத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்