பண்டாரவளை நகரில் டயகம சிறுமி ஹிஷாலியின் மறைவுக்காக ஆத்மா சாந்தி பிரார்த்தனையும் அமைதி ஊர்வலமும் மரணத்துக்கு நீதி கோரிய கண்டனப் பேரணியும் காலை 10.30 மணிக்கு இடம்பெற்றது.
கண்டனப் பேரணி பண்டாரவளை மாநகர சபை முன்பாக ஆரம்பிக்கப்பட்டு நகரூடாக வந்து பண்டாரவளை நகர வளைவு சந்தியில் கண்டனக் கூட்டமாக இடம்பெற்றது.
கல்விமான்கள் சமூக ஆர்வலர்கள் வர்த்தகர்கள் மகளிர் அமைப்புகள் மற்றும் பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.




