தடை செய்யப்பட்ட தங்கூசி வலை மீட்பு

Date:

15 இலட்சம் ரூபா பெறுமதியான தடை செய்யப்பட்ட தங்கூசி வலையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைச்சி குடியிருப்பு பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து விற்பனை செய்யப்பட்ட 100 கிலோ மதிக்கத்தக்க தடை செய்யப்பட்ட தங்கூசி வலை மீட்கப்பட்டது.

குறித்த வலையின் பெறுமதி ஏறத்தாழ 15 லட்சம் மதிக்கத்தக்கது எனவும், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட
தேசிய நீர் உயிரின வளர்ப்பு அதிகார சபையினர் தெரிவிக்கின்றனர்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து யாழப்பாணம், கிளிநொச்சி, முல்லைதீவு மாவட்ட தேசிய நீர் உயிரின வளர்ப்பு அதிகார சபை உத்தியோகத்தர் கு.சங்கீதன், முல்லைதீவு மாவட்ட நீரியல் வளர்ப்பு விரிவாக்கல் உத்தியோகத்தர்களான யோ.பிரசாத், மா.இளவரசன் ஆகியோர் தேடுதல் மேற்கொண்டனர்.

இதன் போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15 லட்சம் மதிக்கத்தக்க 100 கிலோ மதிக்கத்தக்க தடை செய்யப்பட்ட தங்கூசி வலை மீட்கப்பட்டதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான சந்தேகநபர் முல்லைத்தீவு பொலிசாரிடம் அதிகாரிகளால் பாரப்படுத்தப்பட்டுள்ளதுடன், மீட்கப்பட்ட வலைகள் கிளிநொச்சி அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக நாளை ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

‘ஒவ்வொரு நாளும் மாற்றி மாற்றி பேசிக்கொண்டிருக்கக்கூடாது’: ட்ரம்பை விமர்சித்த மக்ரோன்!

ஈரான் விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கருத்துக்களை...

ஈரானின் மிக உயர்ந்த பாலம் குண்டுவீசி அழிப்பு!

ஈரானை குண்டுவீசி "கற்காலத்திற்குத் தள்ளுவோம்" என்று அச்சுறுத்திய சில மணிநேரங்களுக்குப் பிறகு,...

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர்கள்

இலங்கை கிரிக்கெட் நிறுவனம், ரியான் வான் நீகெர்க்கை தேசிய பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்