29.9 C
Jaffna
April 10, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள் விளையாட்டு

3 வீரர்களுக்கும் 1 வருடத்திற்கும் அதிகமான தடையும், அபராதமும் பரிந்துரை!

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஒழுக்க விதி மீறலில் ஈடுபட்ட, இலங்கை அணியின் மூன்று வீரர்களுக்கு போட்டித்தடை, அபராதம் விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட விசாரணைக்குழு இன்று நடத்திய விசாரணையை தொடர்ந்து, இந்த தண்டணைகள்  பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் அதை அங்கீகரித்தால், 3 வீரர்களும் 1 வருடத்திற்கும் அதிக காலம் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் ஆட முடியாது.

தனுஸ்க குணதிலக, நிரோஷன் டிக்வெல்ல, குசல் மெண்டிஸ் ஆகியோருக்கு எதிராகவே தண்டனைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நிரோஷன் டிக்வெல்லவுக்கு 18 மாதங்கள் தடையும், 25,000 அமெரிக்க டொலர் அபராதமும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தனுஸ்க குணதிலக, குசல் மெண்டிஸ் ஆகியோருக்கும் 24 மாதங்கள் கிரிக்கெட் தடையும், 25,000 அமெரிக்க டொலர் அபராதமும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

யாழ், கிளி, மன்னாரில் சங்கு அணியின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

தோனி அவுட்டால் பிரபலமான ரசிகை: இன்ஸ்டாகிராமில் 4 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்

Pagetamil

ஏட்டிக்குப் போட்டியாக வரி விதிப்பு: தீவிரமடையும் அமெரிக்க- சீன வர்த்தகப் போர்!

Pagetamil

பிள்ளையான் கைது!

Pagetamil

கொழும்பு மாநகரசபை, பல யாழ் உள்ளூராட்சிசபைகளுக்கான தேர்தலுக்கு இடைக்கால தடை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!