நடிகர் ஆர்யா மீது இளம்பெண் அளித்த பண மோசடி புகாரின் நிலை என்ன? உயர்நீதிமன்றம் கேள்வி

Date:

நடிகர் ஆர்யாவுக்கு எதிராக இளம்பெண் அளித்த பண மோசடி புகார் மீதான விசாரணையின் தற்போதைய நிலை குறித்து விளக்கமளிக்க சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

 

அண்மையில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படம் பொசிட்டிவான விமர்சனங்களுடன் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் குத்துச் சண்டை வீரராக நடித்த ஆர்யாவிற்கும் பல தரப்பில் இருந்து பாரட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் நடிகர் ஆர்யாவுக்கு எதிராக இளம்பெண் அளித்த பண மோசடி புகார் மீதான விசாரணையின் தற்போதைய நிலை குறித்து விளக்கமளிக்க சிபிசிஐடிக்கு

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

அண்மையில் தன்னை திருமணம் கொள்வதாக கூறி நடிகர் ஆர்யா 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ஜெர்மனியை சேர்ந்த விட்ஜா என்ற பெண் சிபிசிஐடியிடம் புகார் அளித்தார். கடந்த மார்ச் மாதம் கொடுத்த இந்த புகார் மீது வழக்கு பதிவு செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிடக்கோரி விட்ஜா சார்பில் அவரது சார்பாக ராஜபாண்டியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

 

அந்த மனுவில், தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்த ஆர்யா தன்னிடம் 70 லட்சத்திற்கு ரூபாய் மேல் பணம் பெற்றுக்கொண்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், பணத்தை திரும்ப கேட்ட போது, தன்னுடைய வீட்டுக்கடன் அனைத்தையும் செலுத்தி விடுவதாக மணப்பெண்னும் நடிகையுமான சாயிஷாவின் பெற்றோர் உறுதியளித்ததால் மட்டுமே திருமணத்துக்கு சம்மதித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

 

இந்நிலையில் இந்த மனு நேற்றைய தினம் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்தன், ஆர்யா நடிப்பில் தயாராகி வரும் அரண்மனை-3, இரண்டகம் என்ற மலையாள படம் வெளியானால் தனக்கு வர வேண்டிய பணம் கிடைக்காமல் போகும் எனவும், இந்த வழக்கு முடியும் வரை இந்தப்படங்கள் வெளியாக தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.

 

மேலும், சிபிசிஐடியிடம் கொடுத்த புகார் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த புகார் மீதான தற்போதைய நிலை குறித்து பதில் அளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என சிபிசிஐடி தரப்பில் விடுத்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி விசாரணையை அடுத்த மாதம் ஓகஸ்ட் 17 ஆம் திகதிக்கு தள்ளி வைத்தார்.

spot_imgspot_img

More like this
Related

5 கிராம் ஐஸ் வைத்திருந்தவருக்கு ஆயுள்!

5 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப் பொருளைத் தன்வசம் வைத்திருந்து, விற்பனை...

நாளை சில பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயில்

முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் நாளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்