மன்னாரில் வெலிக்கடை சிறைப்படுகொலை!

Date:

வெலிக்கடைச் சிறைப் படுகொலையின் 38 ஆவது ஆண்டு நினைவு தினமான தமிழ் தேசிய வீரர்கள் தினம் இன்று செவ்வாய்க்கிழமை (27) காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்ட தமிழீழ விடுதலை இயக்கம்(ரெலோ) அலுவலகத்தில் நினைவு கூறப்பட்டது.

– தமிழீழ விடுதலை இயக்கம்(ரெலோ) கட்சியின் மாவட்ட அமைப்பாளர் லுஸ்ரின் மோகன் ராஜ் தலைமையில் இடம்பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில் வெளிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட தலைவர் தங்கதுரை,தளபதி குட்டிமணி,முன்னணிப் போராளிகளான ஜெகன்,தேவன் உட்பட 53 அரசியல் கைதிகளுக்கு ம் அஞ்சலி செலுத்தப்பட்டது.

உருவப்படத்துக்கு மாலை அணிவித்து சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன் போது கட்சியின் உறுப்பினர்கள்,கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் செயலாளர் டானியல் வசந்தன், ஈ.பி.ஆர்.கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய மை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நாயுடன் உறவு விவகாரம்: வருத்தம் தெரிவித்த ஹிருணிகா

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திர, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்...

யுத்த வெற்றியினால் தமிழர்களிற்கே அதிக நன்மையாம்: சொல்கிறார் அருண் சித்தார்த்தின் தலைவர்!

யுத்த வெற்றியின் மூலம் அதிகளவிலான நன்மைகளை தமிழ் மக்களே பெற்றுள்ளதாக திலித்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்