அறுந்து விழுந்த பட்டத்தின் நூலால் விபத்து: தாயும், குழந்தையும் பலி!

Date:

பட்டத்தின் நூலில் சிக்கி மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததில் தாயும், குழந்தையும் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற தந்தையும், இன்னொரு பிள்ளையும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு 8.20 மணியளவில் பூசா பிடிவெல்ல நிபுண கடற்படை தளத்திற்கு அருகிலுள்ள காலி-கொழும்பு பிரதான சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது.

அறுந்து வீழ்ந்திருந்த பட்டமொன்றின் நூல் வீதியை குறுக்கறுத்திருந்தது. அந்த வீதியால் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற குடும்பத் தலைவர், நூலில் சிக்கியபோது, கையால் அகற்ற முயன்றதாகவும், அப்போது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவியுடன் காலியில் இருந்து ரத்கமவிற்கு தனது பெற்றோரை சந்திக்க சென்று கொண்டிருந்தார்.

34 வயதான தாயும், ஒன்றரை வயதான குழந்தையும் உயிரிழந்தனர்.

தந்தையும், ஆறு வயது மகனும் இலேசான காயங்களுடன் கராபிட்டி போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கொக்கல விமானப்படை தளத்துடன் இணைக்கப்பட்ட ஒரு சார்ஜென்ட் என்று போலீசார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

நடமாடும் ஏவுதளத்திலிருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்த ரஷ்யா

வடமேற்கு அர்காங்கெல்ஸ்க் பகுதியில் உள்ள ப்ளெசெட்ஸ்க் விண்வெளி ஏவுதளத்திலிருந்து, நகரும் தன்மையுடைய,...

வாசுதேவ நாணயக்கார இலங்கையின் இடதுசாரி அரசியல் வரலாற்றில் முக்கியமானவர் – பிரதமர் ஹரிணி

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, இலங்கையின்...

கல்முனை பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற மீலாதுன் நபி கந்தூரி

மீலாதுன் நபி பெருவிழாவை சிறப்பிக்கும் வகையில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்