மேலும் 4 விலங்குகளிற்கு கொரோனா தொற்று!

Date:

தெஹிவலை மிருகக்காட்சிசாலையில் இரண்டு சிம்பன்சிகள் மற்றும் இரண்டு ஒராங்குட்டான்கள் கோவிட் வைரஸ் தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படுவதாக வனவிலங்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமலவீர திசானநாயக்க தெரிவித்தார்.

விலங்குகள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

முன்னதாக, 2013 ஆம் ஆண்டில் சியோலில் ஒரு மிருகக்காட்சிசாலையில் இருந்து பரிசாக வழங்கப்பட்ட பதினொரு வயது சிங்கம் ‘தோர்’, கோவிட் தொற்றிற்குள்ளானது. இலங்கையில் ஒரு விலங்கு தொற்றிற்குள்ளான முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

பின்னர், 12 வயதான சிங்கம் ‘ஷீனா’ தொற்றிற்குள்ளானது. தற்போது இரண்டும் குணமடைந்து விட்டன.

எவ்வாறாயினும், சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய சுகாதார வழிகாட்டுதல்களின்படி 25% பார்வையாளர்கள் எந்த நேரத்திலும் விலங்கியல் பூங்காக்களை பார்வையிட முடியும் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

நேபாளத்துக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை: திபெத்தில் அணை உடைந்துவிட்டதாக தகவல்

நேபாளத்தை ஒட்டிய திபெத் பகுதியில் அணை ஒன்று உடைந்துவிட்டதாக வெளியான தகவலை...

இயற்கை வளங்கள் இல்லாத சுவிட்சர்லாந்து பணக்கார நாடாக மாறியது எப்படி? இலங்கை ஏன் இன்னும் போராடுகிறது?

தங்கம் போன்ற விலைமதிப்புள்ள உலோகங்களோ, கச்சா எண்ணெயோ இல்லாத, கடலால் சூழப்படாத...

நேபாளத்தில் பேரழிவு வெள்ளம்: 469 பேர் உயிரிழப்பு; 1,000 பேர் காணாமல் போனதாக தகவல்

நேபாளத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பேரழிவு ஏற்பட்டுள்ள...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்