பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, பங்களாதேஷ் மாம்பழங்களை இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு பரிசாக அனுப்பியுள்ளார்.
இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் தாரெக் எம்.டி.அரிபுல் இஸ்லாம் மாம்பழங்களை ஒப்படைத்தார்.
இந்த பரிசுக்கு பங்களாதேஷ் பிரதமருக்கு இலங்கை பிரதமர் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.
இது இரு நாடுகளுக்கும் இடையிலான பலனளிக்கும் உறவைக் குறிக்கிறது என்று அவர் கருத்து வெளியிட்டார்.
முன்னதாக, பிரதமர் ஷேக் ஹசீனா, இந்திய பிரதிநிதி நரேந்திர மோடி, இந்திய ஜனாதிபதி மற்றும் இந்தியாவில் பல முதலமைச்சர்களுக்கு மாம்பழங்களை அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், அண்மையில் யாழ்ப்பாணத்திலிருந்து இயங்கும் உதயன் பத்திரிகையும் மஹிந்த ராஜபக்சவிற்கு மாம்பழங்களை பரிசளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
2
+1
+1
+1