“வீட்டை விட்டு ஓடிப்போகும் ஜோடிகளுக்கு இங்கு திருமணம் செய்து தரப்படும்”: கல்லா கட்டும் பலே கில்லாடி!

Date:

வீட்டை விட்டு ஓடிப்போகும் ஜோடிகளிற்கு திருமணம் செய்து வைக்கும் வர்த்தகத்தை ஆராம்பித்த கில்லாடியொருவர், கல்லா கட்டி வருகிறார்.

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் இந்த வர்த்தக நிலையம் அமைந்துள்ளது.

காதல் ஒன்று அமைவது எவ்வளவு சிரமமோ, அதைவிட சிரமமானது பெற்றோர் சம்மதம்.

நடிகர் விஜய் நடித்த ஷார்ஜகான் திரைப்படத்தில் இப்படி வீட்டாரின் சம்மதம் இல்லாத காதல் ஜோடிகளை சேர்த்து வைப்பார். இதைபோல, ஹரியானா மாநிலத்தில் இப்படியாக ஓடிப்போக விரும்பும் காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கவே தற்போது ஒருவர் கடைய ஒன்றை போட்டுள்ளார்.

ஹரியானா மாநிலம் பஞ்குலா பகுதியில் மாதா மானசா தேவி கோவில் செல்லும் சாலையில் இந்த கடை அமைந்துள்ளது. இந்த கடையில் சென்று காதல் ஜோடிகள் திருமணம் செய்ய வேண்டும் என அவர்களின் விருப்பத்தை சொன்னால் அவர்களுக்கான, திருமண ஆடை, தாலி, போட்டோகிராப், திருமணப்பதிவு, வக்கீல் செலவு என அனைத்தும் செய்து தரப்படுகிறது.

ரூ.5000 முதல் ரூ.16 ஆயிரம் வரை தம்பதிகளில் விருப்பத்திற்கு ஏற்ப பேக்கேஜ்கள் இருக்கிறது. இவை அனைத்தும் 2 நாளில் ஏற்பாடு செய்யப்படும். இந்த கடையின் மூலம் தற்போது 70-80 திருமணங்கள் மாதத்திற்கு நடக்கிறது. இங்கு திருமணம் செய்பவர்கள் வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்தால் கோர்ட்டில் ஆஜராகி இவர்களுக்கு பாதுகாப்பு பெற்று தருவது வரை இந்த கடைக்காரர்கள் உதவுகிறார்களாம்.

spot_imgspot_img

More like this
Related

1 பில்லியன் டொலர் மோசடி! சில வங்கிகள் சிக்கியதாக அதிர்ச்சி தகவல்

நாட்டுக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு; சில வங்கிகளுக்கு தொடர்பு...

ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக இராணுவம், புலனாய்வு பிரிவின் ஒரு பகுதி செயற்பட்டிருந்தால் தண்டனை வழங்க பின்நிற்கமாட்டோம்: ஜனாதிபதி

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல்...

பெண் பிசியோதெரப்பிஸ்ட் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார்!

தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அம்பாறை வைத்தியசாலையின் பெண் பிசியோதெரப்பிஸ்டின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்