அதிர வைக்கும் நிலநடுக்கம்…. இடிந்து விழுந்த கட்டிடம்; 5 பேர் பலி!

Date:

தஜிகிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட நில அதிர்வினால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஜிகிஸ்தான் நாட்டிலுள்ள ரஷீத் நகரின் தெற்கில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது குஜிட் நகரின் தென்கிழக்கில் 153 கிலோமீட்டர் தொலைவில் 40 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது என மத்திய தரைக்கடல் புவியியல் மையம் கூறியுள்ளது. மேலும் இது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் சரிந்து விழுந்துள்ளன. இதில் சிக்கி 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என தஜிகிஸ்தான் அரசு கூறியுள்ளது.

 

spot_imgspot_img

More like this
Related

ஈரான் தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தது ஓமான்

தன் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் தூதரிடம் ஓமான் ஞாயிற்றுக்கிழமை...

மாணவர்களை டெங்கு காய்ச்சலிலிருந்து பாதுகாக்க, சீருடை விதிகளைத் தளர்த்த பாடசாலைகளுக்கு அனுமதி

டெங்குவிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நுளம்புக்கடியிலிருந்து சிறந்த பாதுகாப்பை...

சம்பந்தனுக்கு பொது இடத்தில் நினைவுத்தூபி அமைக்கக்கூடாது

இலங்கை தமிழரசு கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் இரண்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்