31.3 C
Jaffna
March 28, 2024
இலங்கை

வீதியில் இயங்காமல் நின்ற வாகனத்தை தள்ளி இயங்க வைத்த யானை!

ஹபரண பிரதான வீதியில் கோளாறு காரணமாக நடுவீதியில் நின்ற ஹன்டர் வாகனமொன்றை காட்டு யானை, பின்பக்கத்திலிருந்து தள்ளி இயங்க வைத்த காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

அண்மையில் கந்தளாயிலிருந்து, தம்புள்ளைக்கு மரக்கறி ஏற்றச் சென்ற ஹன்டர் வாகனமொன்று, ஹபரண பகுதியில் நடு வீதியில் செயலிழந்து நின்று விட்டது. சாரதி அதனை இயக்க முயன்றார். முடியவில்லை.

அந்த பகுதியில் ஆள் நடமாட்டமும் இருக்கவில்லை. என்ன செய்வதென தெரியாமல் அவர் தவித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த காட்டு யானையொன்று, வாகனத்தின் பக்கமாக இரண்டு முறை தள்ளி, வாகனத்தை இயங்க வைத்தார். இதையடுத்து, வாகனம் நகரத் தொடங்கியது.

இதனை, அந்த வீதி வழியாக வந்த இளைஞன் ஒருவர் தனது கையடக்க தொலைபேசியில் பதிவு செய்து, சமூக ஊடங்களில் பதிவேற்றியுள்ளார். அது வைரலாகியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தனிநபர் செலவீனம் அதிகரிப்பு

Pagetamil

ரொஷான் ரணசிங்க வழக்கை விசாரிக்க புதிய நீதிபதிகள் குழு!

Pagetamil

புத்தரின் படம் பொறித்த முடிவெட்டும் இயந்திரத்தை வைத்திருந்தவர் கைது!

Pagetamil

நுவரெலியாவில் சிக்கிய பெரும் போதைப்பொருள் கடத்தல்காரன்

Pagetamil

முல்லைத்தீவு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீதி விபத்தில் பலி

Pagetamil

Leave a Comment