கண் திருஷ்டி, செய்வினை பாதிப்புகளை போக்கும் மந்திரம்!

Date:

நம்மை அறியாமல் நம்மை துஷ்ட சக்திகள் பிடிக்கின்றன. அத்தகைய பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கும் முனீஸ்வரரை நாம் வழிபடுவதால் வாழ்வில் துன்பங்கள் நீங்கி அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

முற்காலத்தில் இந்தியாவில் கிராமங்களில் அதிகமாக இருந்தன அந்த கிராமங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான குல தெய்வத்தை வழிபடும் வழக்கம் இருந்தது அதில் தங்களின் குடும்ப கஷ்டங்கள் தீரும் தங்களுக்கு சக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கவும் அதிகம் மக்களால் வழிபடப்படும் ஒரு தெய்வமாக முனீஸ்வரன் இருந்து வருகிறார். தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் காவல் தெய்வமாக வழிபடப்படுகிறார் முனீஸ்வரன். தீய சக்திகளை அழிக்கும் சக்தி படைத்த முனீஸ்வரனின் இந்த மூல மந்திரத்தை துதிப்பதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

முனீஸ்வரன் மூல மந்திரம்

ஓம் ஹம் ஜடா மகுடதராய
உக்ர ரூபாய துஷ்ட மர்தனாய
சத்ரு சம்ஹாரனாய ஜடா
முனீஸ்வராய நமஹ

மக்கள் பெரும்பாலானோரின் காவல் தெய்வமாக இருக்கும் முனீஸ்வரருக்குரிய மூல மந்திரம் இது. இந்த துதியை தினமும் காலை 3 முறை துதித்து வெளியே செல்வது நல்லது. செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் அருகிலுள்ள கிராம கோயிலுக்கு சென்று முன்பாக நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, இத்துதியை 27 முறை அல்லது 108 முறை துதித்தால் உங்களுக்கு எதிரிகளால் செய்யப்பட்ட செய்வினை ஏவல்களின் கடுமையான பாதிப்புகள் நீங்கும். வீட்டில் அண்டியிருக்கும் துஷ்ட சக்திகள் அனைத்தும் வெளியேறும். உடல் நலக்குறைவு, மனகுழப்ப நிலை நீங்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் விரைவில் நிறைவேறும். ஊரில் முனீஸ்வரர் கோயில் இல்லாதவர்கள் வீட்டிலேயே முனீஸ்வரை மனதில் நினைத்து இந்த மந்திரத்தை துதித்து வழிபடலாம்

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஒன்றரை வருடங்களாக நட்டத்தில் இயங்கும் கரைச்சி  தெற்கு பல நோக்குகூட்டுறவுச் சங்கம்

கிளிநொச்சியில் முக்கியமான கூட்டுறவுச் சங்கங்களில் ஒன்றாககாணப்படுகின்ற கரைச்சி தெற்கு பலநோக்கு கூட்டுறவுச்...

சுன்னாகம்- புத்தூர் வீதி மூடல்

யாழ்ப்பாணம், சுன்னாகம் - புத்தூர் வீதியானது இன்றும் (16) நாளையும் (17)...

ரயில் விபத்தில் 12 பயணிகள் காயம்

களனி மற்றும் வனவாசல ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் தடம் புரண்டதால்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்