15 வயது சிறுமியை பாலியல் நடவடிக்கைக்காக இணையத்தில் விற்பனை செய்த வழக்கில் மேலும் ஒரு பொலிஸ் அதிகாரியும், வங்கியொன்றின் முன்னாள் முகாமையாளரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தினால் இந்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைதானவர் பொலிஸ் விளையாட்டு பிரிவின் துணை ஆய்வாளர் ஆவார்.
சிறுமியின் கையடக்கத் தொலைபேசியிலிருந்து பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட விசாரணையிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைதான நபர்களை இன்று கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே முன் முற்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் 12 வது சந்தேக நபர் பொலிஸ் விசேட அதிரடிப்படை கான்ஸ்டபிள் என்பது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
2
+1
+1
1