Pagetamil
இலங்கை

UPDATE: 15 வயது சிறுமி இணையத்தில் விற்பனை: பொலிஸ் அதிகாரி, வங்கி முகாமையாளர் கைது!

15 வயது சிறுமியை பாலியல் நடவடிக்கைக்காக இணையத்தில் விற்பனை செய்த வழக்கில் மேலும் ஒரு பொலிஸ் அதிகாரியும், வங்கியொன்றின் முன்னாள் முகாமையாளரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தினால் இந்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைதானவர் பொலிஸ் விளையாட்டு பிரிவின் துணை ஆய்வாளர் ஆவார்.

சிறுமியின் கையடக்கத் தொலைபேசியிலிருந்து பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட விசாரணையிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைதான நபர்களை இன்று கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே முன் முற்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் 12 வது சந்தேக நபர் பொலிஸ் விசேட அதிரடிப்படை கான்ஸ்டபிள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

செவ்வந்தி கடல் வழியாக இந்தியாவுக்கு எஸ்கேப்?

Pagetamil

பிரதேச செயலக உத்தியோகத்தரின் கதிரையை எடுத்து சென்றவருக்கு விளக்கமறியல்: அவருக்கு சமூக வலைத்தளத்தில் ஆதரவு!

Pagetamil

8 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கணித ஆசிரியர் கைது!

Pagetamil

மோசமாக நடந்த இ.போ.ச நடத்துனர் பணி இடைநீக்கம்

Pagetamil

சாணக்கியன் சொன்னதை நிரூபித்து காட்டட்டும்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!