இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற கஞ்சா பறிமுதல்!

Date:

நாகை மாவட்டம் விழுந்தமாவடியில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக கீழையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் வேளாங்கண்ணி முதல் விழுந்தமாவடி வரையிலான பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, விழுந்தமாவடி அருகே சவுக்கு காட்டில் சந்தேகத்திற்குரிய வகையில் பதுக்கி வைத்திருந்த மூட்டைகளை சோதனையிட்டனர்.

அப்போது, அதில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து, 4 மூட்டைகளில் இருந்த சுமார் 126 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். இதுதொடர்பாக கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கஞசாவை இலங்கைக்கு கடத்த முயன்ற விழுந்தமாவடியை வீரமுரசு (26), செருதூரை சேர்ந்த கண்ணன் ஆகியோரை கைதுசெய்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்து கடத்தக்கு பயன்படுத்திய காரையும் கைப்பற்றினர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள வேட்டைக்காரனிருப்பு பகுதியை சேர்ந்த ராகுல் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழில் இளைஞனை கடத்தி சித்திரவதை செய்த கும்பல் கைது!

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை கடத்தி சித்திரவதைக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர்...

கரூரில் தவெகவின் அலட்சியத்தால் உயிரிழந்த 31 பேருக்கு அரசுப்பணி!

கரூரில் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரில் 31 பேருக்கு...

“கரூரில் களத்தில் நின்று காப்பாற்றியது யார், தனி விமானம் பிடித்து ஓடியது யார்?” – செந்தில் பாலாஜி

“திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள், அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்